Contact Us

Name

Email *

Message *

Showing posts with label அபிராமி அந்தாதி (Abhirami Andhadhi). Show all posts
Showing posts with label அபிராமி அந்தாதி (Abhirami Andhadhi). Show all posts

Friday, 20 May 2016

அபிராமி அந்தாதி - நூற்பயன் (Abhirami Andhadhi - Benefit of recitation)


101. நூற்பயன்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் 
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக் 
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும் 
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்.

Friday, 13 May 2016

அபிராமி அந்தாதி - பாடல் 100 (Abhirami Andhadhi - Verse 100)


100. அம்பிகையை மனதில் காண

குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி 
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும் 
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும் 
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!

ஏ, அபிராமி! குழையிலே தவழும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையின் மணம்கமழும் மார்பகங்களையும் தோளையும் உடையவளே! மூங்கிலை ஒத்த அழகிய கரும்பு வில்லும், கலவிபோருக்கு விரும்பக்கூடிய மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும், வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும், மானை ஒத்த மருண்ட கண்களுமே எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அத் திருமேனியையே நான் வழிபடுகின்றேன்.

TO HAVE THE VISION OF ABHIRAMI IN MIND

Kuzhaiyaith thazhuviya konraiyann thaar kamazh kongaivalli
kazhaiyaip porudha thirunnedunn tholum, karuppu villum
vizhaiyap poru thiral veriyam paanamum ven nagaiyum
uzhaiyaip porugannum nensil eppodhum udhikkinrave.

Abhirami! Your following form always appear in my mind: breasts with the combined smell of tender leaves and red iris flowers, shoulder resembling the smooth flexible bamboo, sugarcane bow and fragrant flower missiles making lovers fall in great love, smile exposing thy white beautiful teeth and eyes that resemble those of the terrorized deer.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 6 May 2016

அபிராமி அந்தாதி - பாடல் 99 (Abhirami Andhadhi - Verse 99)


99. அருள் உணர்வு வளர

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன் 
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த 
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம், 
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

ஏ, அபிராமி! அன்று கயிலையங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு மணம் முடித்த மலையரசன் மகளே! கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே! தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தையுடையவளே! (மதுரையில் குயிலாகவும், இமயத்தில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் அம்பிகை விளங்குகின்றாள் என்பது வழக்கு).

TO DEVELOP GRACEFUL CHARACTER

Kuyilaay irukkum kadambaadaviyidai; kola viyan
mayilaay irukkum imayaasalaththidai; vandhu udhiththa
veyilaay irukkum visumbil; kamalaththinmeedhu annam am;
kayilaayarukku anru imavaan aliththa kananguzhaiye.

Abhirami got married to the king of Kailash, Lord Siva by Her father Himavan. She is cuckoo in Kadambha forest, peacock in Himalaya mountains, wise Sun in Chidambaram and swan on lotus in Thiruvarur.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 29 April 2016

அபிராமி அந்தாதி - பாடல் 98 (Abhirami Andhadhi - Verse 98)


98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற

தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு 
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரலந்தது எங்கே?-- 
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள் 
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.

ஏ, அபிராமி! நீ உண்மை பொருந்திய நெஞ்சைத் தவிர வஞ்சகர்களுடைய பொய் மனத்தில் ஒருபோதும் வந்து புகுந்தறியாதவள். பூங்குயில் போன்றவளே! உன்னுடைய பாதத்தாமரையைத் தலையில் சூடிக் கொண்ட சிவபெருமானாகிய சங்கரனின் கையிலிருந்த தீயும், முடிமேல் இருந்த ஆறும் (ஆகாய கங்கை) எங்கே ஒளிந்து கொண்டனவோ?

GET SHIELDED FROM THE DEEDS OF BETRAYERS

Thaivandhu nin adith thaamarai soodiya sangararku
kaivandha theeyum, thalai vandha aarum, kalandhadhu enge?-
mey vandha nensin allaal orugaalum viragar thangal
poyvandha nensil, pugal ariyaa madap poong kuyile!

Abhirami! You enter the minds of the faithful only and it can never enter the minds of the wicked full of deception; you are youthful and like a young cuckoo; where have the fire held by Sankara and the Ganges residing in the locks of Siva gone when he adorned his head with your lotus feets after caressing them with love.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 22 April 2016

அபிராமி அந்தாதி - பாடல் 97 (Abhirami Andhadhi - Verse 97)


97. புகழும் அறமும் வளர

ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன், 
போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி, 
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல் 
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.

என்னுடைய அன்னை அபிராமியை, புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன், முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள் அனைவரும் போற்றித் துதிப்பர்.

FOR THE GROWTH OF FAME AND RIGHTEOUSNESS

Aadhiththan, ambuli, angi kuberan, amarardham kon,
podhir piraman puraari, muraari podhiyamuni,
kaadhip porubadaik kandhan, kanabadhi, kaaman mudhal
saadhiththa punniyar ennilar porruvar, thaiyalaiye.

Sun, Moon, Fire, Kubher, Indra, Brahma, Siva, Vishnu, Agasthiar, Kandan, Ganapathy, Kaman and the rest of the Gods who have accrued good deeds and their command fruition of those deeds worship the supreme lady.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 15 April 2016

அபிராமி அந்தாதி - பாடல் 96 (Abhirami Andhadhi - Verse 96)


96. எங்கும் பெருமை பெற

கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும் 
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய 
சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால் 
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே.

என் அபிராமி அன்னையை, இளமையும் அழகும் மிக்க கோமள வல்லியை, அழகிய மென்மையான தாமரையைக் கோயிலாகக் கொண்டு உறையும் யாமளவல்லியை, குற்றமற்றவளை, எழுதுதற்கு இயலாத எழில் கொண்ட திருமேனியுடையவளை, சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை, தம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்களே, ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்.

TO ATTAIN GLORY

Komalavalliyai, alliyann thaamaraik koyil vaigum
yaamala valliyai, edham ilaalai, ezhudhariya
saamala menich sagalagalaa mayildhannai, thammaal
aamalavum thozhuvaar, ezhu paarukkum aadhibare.

Abhirami is all beauty with brimming youth; she has soft lotus as Her residence; black attraction; flawless; has an attractive structure that can not be pictorised; She is the ace of all arts like peacock; Those who worship that Abhirami to their level best possible shall be made the head of all the seven worlds.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 8 April 2016

அபிராமி அந்தாதி - பாடல் 95 (Abhirami Andhadhi - Verse 95)


95. அபிராமி பாதங்களில் சரணடைய

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது 
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம் 
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக் 
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.

ஏ, அபிராமி! அழியாத குணக்குன்றே! அருட்கடலே! மலையரசன் பெற்றெடுத்த அழகிய கோமள வல்லியே! எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை. அனைத்தையும் அன்றே உன்னுடையதாக்கி விட்டேன். இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும், அவற்றை உணராது விருப்பு, வெறுப்பற்றவனாவேன். இனி என்னை உனக்கே பரம் என்று ஆக்கினேன்.

TO SURRENDER UNTO ABHIRAMI'S FEET

Nanre varuginum, theedhe vilaiginum, naan arivadhu
onreyum illai; unakke param: enakku ulla ellaam
anre unadhu enru aliththu vitten:- azhiyaadha kunak
kunre, arutkadale; imavaan perra komalame!

Abhirami! You are of great character as solid as a rock; also you are grace personified; you are the child of Himavan the king of Himalayas; I have entrusted all my belongings unto you; henceforth whether it is luck or misfortune, I have nothing to sense them; I have made myself your burden.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 1 April 2016

அபிராமி அந்தாதி - பாடல் 94 (Abhirami Andhadhi - Verse 94)


94. மனநிலை தூய்மையாக

விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம் 
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து 
கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம் 
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.

அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி, மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்.

TO ATTAIN MENTAL PURITY

Virumbith thozhum adiyaar vizhinneer malgi, mey pulagam
arumbith thadhumbiya aanandham aagi, arivu izhandhu
karumbin kaliththu, mozhi thadumaari, mun sonna ellaam
tharum piththar aavar enraal abiraami samayam nanre.

Devotees who worship Abhirami, cry like anything, develop goose bumps, overflow with ecstasy, show signs of eroding wisdom, enjoy like wasp, words faltering and give the appearance of a psycho. Hence the religion of Abhirami that showers all the happiness like above is the supreme way of life.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 25 March 2016

அபிராமி அந்தாதி - பாடல் 93 (Abhirami Andhadhi - Verse 93)


93. உள்ளத்தில் ஒளி உண்டாக

நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு, 
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த 
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம், 
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை, மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள். முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள். இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.

KINDLE THE LIGHT OF WISDOM

Nagaiye idhu; indha nyaalam ellaam perra naayagikku,
mugaiye mugizh mulai, maane; mudhu kan mudivuil; andha
vagaiye piraviyum; vambe, malaimagal enbadhum naam;
migaiye ivaldhan thagaimaiyai naadi virumbuvadhe.

Abhirami is gently smiling and has Lotus- buds like sacred bosoms. Her eyes are like that of grateful deer with benevolence flowing in them. She doesn't have end. Similarly she has no birth too. It is shallow argument to say that she is the daughter of the king who ruled over the Himalayan region. Those are mere dissension only. When I think over all these, I can't help laughing. What we can do is to simply reject those assumptions and to aspire to learn Abhirami as she is, by finding her grandeur. All the same, this task is beyond our capacity.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 18 March 2016

அபிராமி அந்தாதி - பாடல் 92 (Abhirami Andhadhi - Verse 92)


92. மனம் பக்குவமடைய

பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன் 
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர் 
மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன் 
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே.

ஏ, அபிராமி! முதல் என்று கூறப்படும் மும்மூர்த்திகளும் மற்றுமுள்ள தேவர்களும் போற்றித் தொழுகின்ற புன்னகையையுடையவளே! உன்னுடைய ஞானத்திற்காகவே உருகிநின்ற என்னை உன் பாதத்திலேயே பற்றும்படி செய்து, உன் வழிப்படியே யான் நடக்கும்படி அடிமையாகக் கொண்டவளே! இனி நான் வேறொரு மதத்திலே மன மயக்கம் கொள்ள மாட்டேன். அவர்கள் செல்லும் வழியிலேயும் செல்ல மாட்டேன்.

TO GET MENTAL MATURITY 

Padhaththe urugi, nin paadhaththile manam parri, un_dhan
idhaththe ozhuga, adimai kondaay; ini, yaan oruvar
madhaththe madhi mayangen; avar pona vazhiyum sellen-
mudhal thevar moovarum yaavarum porrummugizh nagaiye!

Abhirami! You don a pleasing smile. The three supreme Gods Brahma, Vishnu and Siva along with the rest of the heaven dwellers worship you. I am always at your feet pining all the time seeking your wisdom that guides me ever.in that way you have made me you slave. Hence I shall not follow any other ideology or methods of enlightenment.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 11 March 2016

அபிராமி அந்தாதி - பாடல் 91 (Abhirami Andhadhi - Verse 91)


91. அரசு அதிகாரப் பணியில் சிறக்க  

மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் 
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை 
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு, 
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.

அபிராமித் தேவி! நீ மின்னல் போலும் மெல்லிய இடையினை உடையவள்; விரிந்த சடைமுடி நாதர் சிவபிரானோடு இணைந்து நிற்கும் மென்மையான முலைகளையுடையவள்; பொன்னைப் போன்றவள். இவ்வாறாகிய உன்னை வேதப்படி தொழுகின்ற அடியார்க்கும் அடியவர்கள், பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கிவர, வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மேலே ஊர்ந்து செல்லும் இந்திரப் பதவி முதலான செல்வ போகங்களைப் பெறுவர்.

TO EXCEL AS LEGISLATOR 

Melliya nun idai min anaiyaalai virisadaiyon
pulliya men mulaip pon anaiyaalai, pugazhndhu marai
solliyavannam thozhum adiyaaraith thozhumavarkku,
palliyam aarththu ezha, ven pagadu oorum padham tharume.

Abhirami has a small hip similar to the thickness of lightning flash and soft breasts that just touch the body of my Lord Siva who has locks of hair spread. She has a gold complexioned body. Those who pray Her as per the norms laid down by the Vedas shall be blessed with all the riches and posts similar to Indira traveling on the white elephant accompanied by the musical instruments. 



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 4 March 2016

அபிராமி அந்தாதி - பாடல் 90 (Abhirami Andhadhi - Verse 90)


90. மனம் வேறுபட்ட தம்பதிகள் இனைய 

வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து, 
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப் 
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு 
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

ஏ, அபிராமி! உலகில் எனக்கு இனிக் கிடைக்காத பொருளென்று ஏதுமில்லை. என்னுடைய உள்ளத் தாமரையை உன்னுடைய பழைய உறைவிடமாகக் கருதி வந்தமர்ந்தாய். மேலும் நான் பிறந்தும், இறந்தும் வருந்தாமல் இருக்க அருள் புரிந்தாய். பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை திருமால் தேவர்களுக்குக் கொடுக்க முதலாக இருந்த அபிராமியே, எனக்கு இனியேது குறை?

FOR REUNION OF ESTRANGED COUPLES

Varundhaavagai, en manaththaamaraiyinil vandhu pugundhu,
irundhaal, pazhaiya iruppidamaaga; ini enakkup
porundhaadhu oru porul illai-vin mevum pulavarukku
virundhaaga velai marundhaanadhai nalgum melliyale!

Abhirami, you were responsible for the distribution of the nectar, which resulted from the milk ocean, to the devas by Vishnu; you elevated me from suffering by disconnecting the cycle of birth and death; this you made it possible by occupying my lotus mind as if it is your old house; henceforth nothing is unattainable to me.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 26 February 2016

அபிராமி அந்தாதி - பாடல் 89 (Abhirami Andhadhi - Verse 89)


89. யோக சித்தி பெற

சிறக்கும் கமலத் திருவே. நின்சேவடி சென்னி வைக்கத் 
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற 
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு 
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.

அபிராமித் தாயே! சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே! என்னுடைய உயிருக்கும், உடலுக்கும் தொடர்பற்று, அறிவு மறதி மிகுந்து இருக்கும் வேளையில் உன்னுடைய சேவடி என்னுடைய சென்னியில் படர வேண்டும். மேலும், பற்றின்மையை அனுக்கிரகிக்கும் உன்னுடைய துணைவரும் வந்து மோன நிலையில் நான் அறிதுயிலில் அமரும் பேற்றை அருள வேண்டும்.

TO ATTAIN YOGA SIDDHI 

Sirakkum kamalath thiruve! nin_sevadi senni vaikkath
thurakkam tharuma nin thunaivarum neeyum, thuriyam arra
urakkam thara vandhu, udambodu uyir uravu arru arivu
marakkum pozhudhu, en munne varal vendum varundhiyume.

Mother Abhirami! Seated on the flawless lotus flower! When my body and spirit are lying dissociated and when I am brimming with forgetfulness, your consort my Lord who grants renunciation and you together should manifest in front of me thus giving you the chance to place your feet on my head; both of you should grant be the tranquil state that make me meditate in peace.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 19 February 2016

அபிராமி அந்தாதி - பாடல் 88 (Abhirami Andhadhi - Verse 88)


88. எப்போதும் அம்பிகை அருள் பெற

பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள் 
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம் 
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன் 
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே.

ஏ, அபிராமி! பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே! யாருமே துணையில்லாத நான், நீயே கதியென்று சரணடைந்தேன். ஆகையால் எளியோனாகிய என்னிடத்தில் உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று நீ தள்ளி விடுதல் தகாது. அது உன் அருளுக்கும் அறமன்று.

GET THE GRACE OF AMBICA FOREVER 

Param enru unai adaindhen, thamiyenum; un paththarukkul
'tharam anru ivan' enru thallath thagaadhu-thariyalardham
puram anru eriyap poruppuvil vaangiya, podhil ayan
siram onru serra, kaiyaan idap paagam sirandhavale!

Hey Abhirami who has occupied the left side of my Lord Siva the destroyer of the three cities “ Thripuram” by wielding mount Meru as His bow and also plucking out the egoistic head of the the creator Brahma, I do not have any companion; I surrender unto you for protection; do not neglect me telling I do not deserve your protection which will not suit your graceful stature.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 12 February 2016

அபிராமி அந்தாதி - பாடல் 87 (Abhirami Andhadhi - Verse 87)


87. செயற்கரிய செய்து புகழ் பெற

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன் 
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை 
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம் 
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.

ஏ, அபிராமி! நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே! எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே! (ஈதென்ன வியப்போ!)

ACCOMPLISH RARE FEAT AND RISE TO FAME

Mozhikkum ninaivukkum ettaadha nin thirumoorththam, en_dhan
vizhikkum vinaikkum velinninradhaal,-vizhiyaal madhanai
azhikkum thalaivar, azhiyaa viradhaththai andam ellaam
pazhikkumbadi, oru paagam kondu aalum paraabaraiye!

Abhirami! You occupied the left half of My Lord Siva of steadfast penance, destroyer of Manmadhan with His forehead eye, thus making Him the laughing stock; you made your form, which is beyond words and mind, appear to my eyes and prayers.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 5 February 2016

அபிராமி அந்தாதி - பாடல் 86 (Abhirami Andhadhi - Verse 86)


86. ஆயுத பயம் நீங்க

மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற 
காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு 
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய் 
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

ஏ, அபிராமி! பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! யமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும், வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.

TO OVERCOME FEAR OF WEAPON

Maal ayan theda, marai theda, vaanavar theda ninra
kaalaiyum, soodagak kaiyaiyum, kondu-kadhiththa kappu
velai veng kaalan enmel vidumbodhu, veli nil kandaay
paalaiyum thenaiyum paagaiyum polum panimozhiye!

Hey Abhirami! You speak sweet and soft word equivalent to the milk, honey and the jaggery syrup. When the Lord of Death, Yama throws the multipronged spear on me, you should appear in front of me with the conch adorning your hands and the feet, which are not traceable to Vishnu, Brahma and the Vedas! 



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 29 January 2016

அபிராமி அந்தாதி - பாடல் 85 (Abhirami Andhadhi - Verse 85)


85. துன்பங்கள் நீங்க

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு 
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம் 
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும், 
வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே.

ஏ, அபிராமி! நான் எத்திசையை நோக்கினும் உன்னுடைய படைகளாகிய பாசமும், அங்குசமும், வண்டுகள் மறைந்திருக்கும் மலர் அம்பு ஐந்தும், கரும்பு வில்லும், என்னுடைய துன்பங்களெல்லாம் தீர்க்கக் கூடிய திரிபுரையாகிய நின் திருமேனி அழகும், சிற்றிடையும், கச்சையணிந்த குங்குமம் தோய்ந்த மார்பகங்களும், அவற்றின் மேலே அசையும் முத்துமாலையும் என்கண்முன் காட்சியாய் நிற்கின்றன. (எங்கும் பரந்தவள்).

TO OVERCOME SUFFERING

Paarkkum thisaidhorum paasaangusamum, panich sirai vandu
aarkkum pudhumalar aindhum, karumbum, en allal ellaam
theerkkum thiriburaiyaal thiru meniyum, sirridaiyum,
vaark kunguma mulaiyum, mulaimel muththu maalaiyume.

Abhirami! You are the Thiripura Sundari who has killed all my sufferings. Which ever direction I look,, there your graceful appearance with your weapons ‘Pasam' and ‘Angusam' five-flower arrows with honey bees sitting on them, sugar cane bow, your sacred physique ,slender waist, with your bosoms fastened and KumKum mixture (fragrant paste) smeared on the bosoms and pearl necklace are all seen.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 22 January 2016

அபிராமி அந்தாதி - பாடல் 84 (Abhirami Andhadhi - Verse 84)


84. சங்கடங்கள் தீர

உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ் 
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல் 
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப் 
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

ஏ, அடியார்களே! என் அபிராமி, இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள். ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள். வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள். ஒளி விளங்கும் நுண்மையான நூலிடையாள். சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள். என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள். என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள். அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள். நீங்களும் பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள்.

TO ENDURE AND OVERCOME HARDSHIP

Udaiyaalai, olgu sembattudaiyaalai, olirmadhich seny
sadaiyaalai, vansagar nensu adaiyaalai, thayangu nun nool
idaiyaalai, engal pemmaan idaiyaalai, ingu ennai inip
padaiyaalai, ungalaiyum padaiyaavannam paarththirume.

Oh! Devotees! My mother Abhirami pervades through all the worlds. She possesses everything found in the world. She clads with resplendent silk. She wears the bright moon on her matted hair. She does not reside in the hearts which do not have love in them. Abhirami is slender waisted. She is present on the left half of my Lord Shiva. She will not make us return in this world again. You all praise and bow down to her feet. Should you want freedom from birth, death cycle, you meditate on her only.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Thursday, 14 January 2016

அபிராமி அந்தாதி - பாடல் 83 (Abhirami Andhadhi - Verse 83)



83. இந்திரன் போல வாழ

விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம் 
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும் 
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும், 
உரவும் குலிகமும், கற்பகக் காவும் உடையவரே.

அன்னையே, அபிராமி! உன்னுடைய மணம்மிக்க திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புதுமலர்களை வைத்து இரவு, பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள், தேவர்கள் முதலிய யாவரும் இந்திர பதவி, ஐராவதம் என்ற யானை, ஆகாய கங்கை, வலிமையான வஜ்ஜிர ஆயுதம், கற்பகச் சோலை முதலியவைகளை முறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். (எனக்கும் அருள்வாயாக!)

TO LIVE LIKE INDRA

Viravum pudhu malar ittu, nin paadha viraikkamalam
iravum pagalum irainsa vallaar, imaiyor evarum
paravum padhamum, ayiraavadhamum, pageeradhiyum,
uravum kuligamum, karpagak kaavum udaiyavare.

Abhirami! austere saints and heavenly beings place fresh flowers unto your fragrant-Lotus-feet and they bow down to you in worship night and day. They (austere saints and heavenly beings) who worship you night and day are living with the blessings of royal crown, white elephant, Akasha Ganga, (celestial river Ganga) the weapon Vajra; and all wishes- giving- Karpaga grove. Abhirami! you bless me also with the above gifts and come now.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

Friday, 8 January 2016

அபிராமி அந்தாதி - பாடல் 82 (Abhirami Andhadhi - Verse 82)


82. மன ஒருமைப்பாடு அடைய

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின் 
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும், 
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு 
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே?

ஏ, அபிராமி! வண்டுகள் ஆர்க்கும் தாமரையில் வாழ்பவளே! பேரழகானவளே! உலகமெல்லாம் ஒளியாக நின்ற, ஒளிவீசும் உன்னுடைய திருமேனியை நான் நினைக்கும்தோறும் களிப்படைகின்றேன். அக்களிப்பின் மிகுதியால் அந்தக் காரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, பரவெளியாகவுள்ள ஆகாயத்தில் ஒன்றி விடுகின்றன. இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை நான் எவ்வாறு மறப்பேன்? (மறவேன் ஒருபோதும்).

TO FOCUS THE MIND

Ali aar kamalaththil aaranange! agilaandamum nin
oliyaaga ninra olir thirumeniyai ulludhorum,
kali aagi, andhakkaranangal vimmi, karaiburandu
veliyaayvidin, engngane marappen, nin viraginaiye?

Abhirami! you are the Goddess, present in the Lotus flower full of honey-bees. I have become spiritually enlightened while I see your effulgent physique, which brightens the whole world. In that state my joy runs boundless like flood and my happiness figuratively also flows towards plains. I will never forget your skill and austere path with which you blessed me.



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html