Contact Us

Name

Email *

Message *

Showing posts with label தெய்வத்தின் குரல். Show all posts
Showing posts with label தெய்வத்தின் குரல். Show all posts

Thursday, 2 February 2017

மஹாசிவராத்திரி மஹிமை

1952ம் ஆண்டு பிப்.23ல் நடந்த மஹாசிவராத்திரியன்று, காஞ்சி மஹாபெரியவர் மயிலாடுதுறையை அடுத்த நாகங்குடி கிராமத்தில் தங்கி இருந்தார். அங்கு பக்தர்கள் மத்தியில் பரமசிவன் மஹிமை குறித்து அவர் பேசியது எல்லாரையும் கவர்ந்தது. பெரியவருடன் 40 ஆண்டுகள் கைங்கர்யம் செய்த குமரேசன், புத்தகம் ஒன்றில் இருந்த இது குறித்து கூறினார்.

உருக்கப்பட்ட நெய் நிறமற்றதாக இருக்கும். அதே நெய் குளிர்ந்தவுடன் வேறொரு நிறத்தை அடையும். கடவுளும் உருவமற்ற நிலையில் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் அவரே பக்தர்களின் உள்ளத்தில் அன்பு பூரணமாகும் போது பக்திக்கு கட்டுப்பட்டு உருவம் தாங்கி வருகிறார். விஷ்ணு போல சிவன் அவதரிக்காவிட்டாலும், அநேகமான மோகன ரூபங்களை எடுத்து நம்மைக் காக்கிறார்.

Friday, 29 July 2016

காமாக்ஷி கடாக்ஷத்தின் அடையாளம் Signs of Kamakshi Kataksham

Sri Muka Panchashati was composed by Sri Muka Sankarendra Saraswati, the 20th Acharya to adorn Sri Kanchi Kamakoti Peetam. The acharya was the son of one Vidyavati, an astrologer and astronomer. He was a congenital deaf-mute. But through the grace of Goddess Kamakshi he gained the power of speech. On knowing this attainment of speech by Muka because of the grace of Devi, the then Acharya of Sri Kanchi Kamakoti Peetam, Sri Vidyaghana, sent for the boy's parents and told them of his intention of giving sanyasa to the boy and, with their consent, gave sanyasa to the boy and ordained him as his successor in the Kamakoti Math. Vikramaditya Sakari of Ujjain, Matrugupta, some time king of Kashmir, and Pravarasena, who succeeded Matrugupta on the throne, all considered it a rare privilege to serve at the feet of this great Acharya. Muka Sankara is the author of Muka Panchasati, a lyrical outburst of poetry on Kamakshi, The mellifluence of the work is said to be rivaled only by Lila Suka's Krishna Karnamrta. He attained mukti at a village near Godavari on full moon day in the month of Sravana of the cyclic year Dhatu (437 AD).

Saturday, 18 June 2016

நாம மஹிமை nAma mahimai

Scroll down to read in English

தியானம், ஜபம், பூஜை, யக்ஞம் க்ஷேத்திராடனம் ஆகியவற்றைப் போலவே நம் தேசத்தில் நீண்ட காலமாக பகவன் நாமாக்களைக் கோஷ்டியாகப் பாடி பஜனை செய்கின்ற பழக்கமும் இருந்து வருகிறது. இந்த ஜீவாத்மாவானது அந்த பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு பெரிய உபாயமாக நாம பஜனை தொன்று தொட்டு தேசத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. அநேகமாக கிராமம், நகரம் எல்லாவற்றிலும் பஜனை மடம், அல்லது பஜனைக்கூடம் என்றே ஒன்று காணக்கிடைப்படுவதிலிருந்து, பஜனை பத்ததி நம் நாட்டில் எவ்வளவு செழிப்பாக இருக்கின்றது என்று ஊகிக்கலாம். இந்த பஜனை மடங்களில் சனிக்கிழமை தோறும், ஏகாதசி தோறும் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள்.

Thursday, 16 June 2016

திருவாரூர் தியாகராஜஸ்வாமி - அஜபா நடனம்


தாண்டவம் என்று பொதுவாகச் சொல்லப்படும் சிவ நடனத்திலே பல விதங்கள் உண்டு. சிதம்பரத்தில் ஆனந்தத் தாண்டவம், திருவாலங்காட்டில் ஊர்த்வத் தாண்டவம், இப்படி இது தவிர சோளஸீமையிலேயே ஏழு தியாகராஜாக்கள் ஏழுவிதமான தாண்டவங்களைச் செய்கிறார்கள். ஸப்தவிடங்க க்ஷேத்ரம் என்று அந்த ஏழு க்ஷேத்ரங்களுக்குப்பேர். அவற்றில் ப்ரதானமானது திருவாரூர். அங்கேயுள்ளவர்தான் ஏழு பேரிலும் மூல தியாகராஜர். அவர் ஆடும் நடனத்திற்கு ஹம்ஸ நடனம் என்று பெயர். அஜபா நடனம் என்றும் அதற்கு இன்னொரு பெயர்.

Thursday, 29 October 2015

துலா ஸ்நானம் - மாயூரம் "லாகடம்"

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

'காவேரி புராண'த்தில் இன்னொரு பாடத்தில் மாயவரத்தில் இருக்கப்பட்ட காவேரித் துறையான துலா கட்டத்துக்கு முக்யத்வம் கொடுத்திருக்கிறது. இப்போது அதை லாகடம் என்று ஜனங்கள் சொல்கிறார்கள். இது துலா கட்டம் என்பதன் திரிபுதான். துலா ஸ்நானத்துக்கு வரும் யாத்ரிகளுக்கு வசதியாகக் கட்டப்பட்ட படித்துறைதான் துலா கட்டம் (லாகடம்). மாயவரத்திலும் இன்னம் ஆறேழு காவேரிக் கரை க்ஷேத்ரங்களிலும் துலா கட்டங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் அச்சடித்ததைப் போல் ஒரே ப்ளானில் கட்டப்பட்டிருக்கின்றன. துலாஸ்நான மகிமையைச் சொல்கிற இடத்தில், காவேரி புராணத்தில் ஒரு பாடத்தின்படி ஸ்ரீ ரங்கத்துக்கும் தர்மவர்மாவுக்கும் முக்யத்வம் தந்திருக்கிறதென்றால், இன்னொரு பாடத்தில் மாயவரத்துக்கும் அங்கே துலா ஸ்நானம் செய்து மோக்ஷம் அடைந்த ஒரு பிராம்மண தம்பதிக்கும் முக்யத்வம் தந்திருக்கிறது.

Wednesday, 23 September 2015

சிவ நாம மஹிமை

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

யத்-த்வயக்ஷரம் நாம கிரேரிதம் த்ருணாம்
ஸக்ருத் ப்ரஸங்காத் அகம் ஆக ஹந்தி...

'த்வயக்ஷரம் நாம' - 'இரண்டே இரண்டு அக்ஷரம் உள்ள சிவ நாமா'. பஞ்சாக்ஷரமாக அதற்கு முன்னாடிப் ப்ரணவம், பின்னாடி 'நம': சொல்லணுமென்றுகூட இல்லை. அவ்வளவு ச்ரமம் வேண்டாம். இரண்டெழுத்தைச் சொன்னாலே போதும்.

'சிவசிவ எனகிலர் தீவினையாளர்' என்றுதான் திருமந்திர'த்தில் கூட இருக்கிறது; பஞ்சாக்ஷரமாகச் சொல்லவில்லை. "த்வயக்ஷரம் நாம கிரா" என்றால் 'இரண்டே அக்ஷரமுள்ள நாமமான வார்த்தை'. இந்த வார்த்தையானது மனிதர்களால் சொல்லப்பட்டால் ('ந்ருணாம் ஈரிதம்' - மநுஷ்யர்களால் சொல்லப்பட்டால்).

Sunday, 3 August 2014

உபாகர்மா

து ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப்பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

Friday, 27 June 2014

மரக்கறியில் ஹிம்ஸை இல்லையா ?

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

ப்படிச் சொன்னால் உடனே திருப்பிக் கொள்கிறார்கள். "மிருகம் பக்ஷி மட்டும்தானா? மரம், செடி, கொடி, பயிர் இவையும் ஈசன் குழந்தைகள்தான். அவற்றுக்கும்தான் உயிரும், உணர்ச்சிகளும் இருக்கின்றன. ஜகதீஷ்சந்திர போஸ் முதலியவர்கள் சொல்லியிருக்கிறார்களே! அதனால் சாக உணவு என்பதும் ஜீவஹத்திதான்" என்கிறார்கள்.

இதற்கு நான் ஸமாதானம் சொல்லியாக வேண்டும். ஜே.ஸி.போஸுக்கு எத்தனையோ யுகம் முந்தியே வேதாதி சாஸ்திரங்கள் பயிர், பச்சை, மரம், மட்டை எல்லாம் உயிருள்ளவை என்று சொல்லித்தான் வந்திருக்கின்றன. ஆனாலும் ஈஸ்வர நியதியில் நல்லது போலவே கெட்டது, ஸெளக்யம் போலவே கஷ்டம் எல்லாமும் சேர்ந்து சேர்ந்துதான் இருக்கிறது. 'இன்ஸ்டிங்க்டிவ்' ஆகவும் (உள்ளுணர்ச்சிப் பிரகாரமும்), தேஹத்தின் இயற்கையான தன்மையைப் பொருத்தும் சிங்கம், புலி முதலான பிராணிகள் ஜீவஹிம்ஸை பண்ணித்தான் ஜீவிக்க வேண்டும் என்று ஈஸ்வர நியதியே இருக்கிறது. மநுஷ்யன் விஷயத்தில் மாத்திரம் இவன் எதையும் ஆலோசித்துத் தெளிந்து முடிவு எடுக்கும்படியாக அறிவு விசேஷத்தை (ஈசன்) கொடுத்திருக்கிறான். அதனால், இந்த பிரபஞ்ச நாடகத்தில் இவன் முழுக்கவும் நல்லதுதான் வேண்டும், ஸெளக்யம்தான் வேண்டும் என்று பண்ணிக்கொள்ள முடியாமல் 'நேச்சர்' என்ற பெயரில் ஈஸ்வரன் கட்டிப் போட்டாலும், இப்படிக் கட்டிப்போட்ட கயிறு நீளுகிற எல்லைக்குள்ளாவது இவன் கூடியமட்டும் கெட்டதைத் தள்ளி நல்லதையும், கூடியமட்டும் கஷ்டத்தைத் தள்ளி ஸெளக்யத்தையும் தேடி அடைய வேண்டியவனாக இருக்கிறான். எதையோ தின்று தானாக வேண்டும். இல்லாவிட்டால் சாக வேண்டியதுதான் என்ற necessity இவனுக்கு இருக்கிறது - இயற்கை அப்படிக் கட்டி வைத்துருக்கிறது. எங்கேயோ லக்ஷத்தில் ஒருத்தனாக லோக வாழ்க்கையைப் பொருட்படுத்தாமலே உதறி விட்டுப் போகிறவனைத் தவிர மற்ற எல்லாரும் இந்த யதார்த்தத்தை அநுஸரித்துத்தான் போகணுமே தவிர, 'சாலஞ்ஜ்' பண்ணி முடியாது. 'ஸரி, எதையோ தின்னத்தான் வேண்டுமென்றால், கூடியவரை கெடுதலை, கஷ்டத்தை உண்டாக்காமல் அமைத்துக்கொள்ளக்கூடிய ஆஹார முறை என்ன?'என்று பார்ப்பதே இவன் செய்ய வேண்டியது. இருப்பதில் குறைச்சலான ஹிம்ஸை தருவது பயிர் பச்சைகளையும் காய்கறிகளையும் சாப்பிடுவதுதான்.

Wednesday, 18 June 2014

'சைவ ' உணவு

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

ஹார விஷயத்தில் பதார்த்த சுத்தியைப் பார்க்கும் போது ஐடியல் என்பது அஹிம்ஸா போஜனம் சாக உணவு, மரக்கறி உணவு என்கிற வெஜிடேரியனிஸம், 'புலால் மறுத்தல்' என்று திருக்குறள் முதலானவற்றில் வலியுறுத்தியிருப்பது இதைத்தான்.

'சைவம்', என்று வெஜிடேரியனுக்கு ஏன் பேர் என்றால், தமிழ் தேசத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் அப்பிராமணர்களாக இருக்கப்பட்டவர்களில் சைவர்களே வெஜிடேரியன்களாக இருந்ததுதான். மாம்ஸம் மட்டுந்தான் என்றில்லை; வெஜிடேரியன் ஆஹாரத்திலுங்கூட சித்தசுத்திக்கு உதவாததாக இருப்பதை நல்ல ஆசார சீலர்களான சைவர்கள் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். 'முக்காயம் தள்ளியவர்கள்' என்று அவர்களைச் சொல்வதுண்டு காயம் என்றால் உடம்பு அல்லவா? உடம்பு ஊன்தானே? முக்காயம் என்கிற மூன்றுவித ஊன் என்ன? 

Saturday, 14 June 2014

தலை நாடி பற்றிய தவறான கருத்து

தெய்வத்தின் குரல் (ஆறாம் பாகம்).

ன்னொரு ஸமாசாரம்: ஹ்ருதயத்திலிருந்து சிரஸுக்குப் போகிற நாடி பற்றியது. உத்தராயண மரணத்தைப் பற்றி ஸரியான அபிப்ராயம் இல்லாதது போலவே இதைப் பற்றியும் இருக்கிறது. உத்தராயண மரணம் என்பது வாஸ்தவத்தில் அதற்கேற்பட்ட தேவதைகளுடைய ஸ்தானம் வழியாகப் போவது என்று தெரிந்த விஷயஜ்ஞர்களுங்கூட (ரொம்பப் பெரியவர்கள், ஆசார்ய பாஷ்யங்களை இன்னம் விளக்கமாக புரியவைப்பதற்காக அவற்றுக்கு வ்யாக்யானம் எழுதிய பல பேர்கூட) இந்த நாடி விஷயத்தில் ஸரியான அபிப்ராயமில்லாமலே இருக்கிறார்கள். அதாவது, எல்லாரும் அந்த நாடியை யோக சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் ஸுக்ஷும்னை என்றே நினைக்கிறார்கள்.

ஆனால் இது அந்த ஸுக்ஷும்னை இல்லை. அது (யோக சாஸ்திர ஸுக்ஷும்னை) முதுகுத் தண்டின் அடியில், மூலாதாரம் என்கிற இடத்திலிருந்து புறப்பட்டு நேர் மேலாக சிரஸுக்குப் போவது. உபநிஷத்துக்களிலும் பிரம்ம ஸுத்ரத்திலும் சொல்லி நாம் பார்த்ததோ ஹ்ருதயத்திலிருந்து புறப்படுவது. மூலாதாரத்திலிருந்து புறப்படும் ஸுக்ஷும்னையில் ப்ராண சக்தியை ஏற்றிக்கொண்டு போவது அதற்கென்று ஸாதனை பண்ணும் யோகிகளை மட்டுமே குறித்த விஷயம். அவர்கள் லோகாதார சக்தியைப் பிடித்து அதன் வழியாக சிரஸிஸ் சிவத்தில் ஐக்யமாகிறவர்கள். அது ஒரு குறிப்பிட்ட யோக ஸமாசாரம். ஒளபநிஷதமான (உபநிஷத்துக்களின் ஆதாரத்தில் அமைந்த) நம்முடைய வேதாந்த மதம் அந்த ஸமாசாரங்களைத் தொடுவதில்லை.

Sunday, 23 March 2014

ஸம்ஸ்கிருதமும் தமிழும்


தெய்வத்தின் குரல் (ஏழாம் பாகம்).

ஸம்ஸ்கிருத விரோதம்
 
ரு ஊரிலே ஏழைகள் 'பஞ்சம், பணம் வேணும்' என்று சீஃப் மினிஸ்டருக்கு, முதன் மந்திரி என்கிறார்களே அவருக்கு... இல்லை, இப்போது அதை முதலமைச்சர் என்று ஆக்கியிருக்கிறார்கள். எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது! ஸம்ஸ்கிருதத்தை அடித்துத் துரத்தி விட்டால் அதுவே தமிழ் வளர்ச்சி என்பதாக இப்போது ஒரு 'நல்ல' கொள்கை நடைமுறைக்கு வந்திருக்கிறது! அடித்துத் துரத்தும் தலைவர்களில் ஆரம்பித்து இப்படித் தனித் தமிழ் முழக்கம் செய்பவர்களில் எத்தனை பேருக்குத் தமிழிலக்கியத்தில் - தெய்வ ஸம்பந்தமான இலக்கியம் கூடாது என்றே வைத்துவிட்டாலும், 'ஸெக்யுலர் லிட்ரேசரா'கவே வைக்கப்பட்ட தமிழிலக்கியத்தில் திருக்குறள், திருக்குறள் என்கிறார்களே, அதில்கூடப் பரிச்சயம் இருக்கிறது என்று பார்த்தால், ஒரு பெர்ஸென்ட், இரண்டு பெர்ஸென்ட் தேறுமா என்பதே ஸந்தேஹம் என்று தெரிகிறது. ஆனாலும் ஸம்ஸ்கிருதத்தை அடித்துத் துரத்த வேண்டும் என்று மட்டும் அநேகமாக நூறு பர்ஸன்ட்காரர்களும் முஸ்தீபாக இருக்கிறார்கள்! அந்த ஸம்ஸ்கிருதம் என்னமோ இவர்கள் அடித்துத் துரத்தினதாக நினைக்கிற இடங்களிலும் இவர்களுக்கே தெரியாமல் வந்து பூந்து கொள்கிறது!

Tuesday, 11 February 2014

உத்தராயண மரணம் : அதன் சரியான பொருள்

தெய்வத்தின் குரல் (ஆறாம் பாகம்).

த்தராயண மரணம் என்பது ஒரளவு நல்ல பிரஸித்தி அடைந்து விட்டது. ஆனாலும் அதைப் பற்றியுள்ள பொது அபிப்ராயம் ஸரியாயில்லை. நான் சொல்லப் போகிற விஷயம் உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கலாம். ஆனால் ஆசார்யாள் பாஷ்யத்தில் சொல்லியிருப்பதைத்தான் சொல்கிறேன். உத்தராயண மரணம் என்பதற்குத் தை மாஸத்திலிருந்து ஆடி ஆரம்பிக்கிற வரை உள்ள ஆறு மாஸத்திலிருந்து ஆடி ஆரம்பிக்கிற வரை உள்ள ஆறு மாஸத்தில் செத்துப் போவது என்று ஆசார்யாள் அர்த்தம் பண்ணவேயில்லை. பின்னே எப்படிப் பண்ணியிருக்கிறாரென்றால்: அந்த யோகி, (ஞானி தவிர நிஷ்காம கர்மி, பக்தன் முதலான எந்த உபாஸகனுமே) ஹ்ருதயத்திலிருந்து சிரஸுக்குப் போகிற நாடி வழியாக ப்ராண வியோகமாகி தேவயானம் என்ற தெய்வீக மார்க்கத்தின் வழியாக ப்ரஹ்ம லோகத்திற்குப் போகிறான். அந்த டெர்மினஸுக்குப் போகிறதற்கு முன்னாடி அநேக ஜங்க்ஷன்கள்! அவை ஒவ்வொன்றும் ஒரு தேவதையின் ஸ்தானம். அப்படி முதலில் அக்னியின் ஸ்தானம் வருகிறது அப்புறம் சுக்ல பக்ஷ தேவதையின் ஸ்தானம். அதற்கப்புறம் உத்தராயண கல்யாணத்திற்கு தேவதைகளின் ஸ்தானம்- கவனமாகக் கேட்டுக்கொள்ள வேண்டும்; உத்தராயண காலம் இல்லை; அந்தக் காலத்திற்கு தேவதைகளாக இருக்கப்பட்டவர்களின் ஸ்தானம் - என்றிப்படி இன்னும் சில ஜங்க்ஷன்களையும் தாண்டி டெர்மினஸ் போய்ச் சேருவதாகவே ஆசார்யாள் விளக்கியிருக்கிறார். பகவானும் ஏற்கெனவே சாந்தோக்யம், ப்ருஹதாரண்யகம் முதலிய உபநிஷத்துக்கள் சொல்லியிருப்பதை அநுஸரித்துதான் கீதையில் சொன்னது. அவற்றுக்கு ஆசார்யாள் செய்துள்ள பாஷ்யங்களும், கீதைக்குப் பிற்காலத்தில் உண்டான ப்ரஹ்ம ஸுத்ரம், அதன் பாஷ்யம் ஆகியவையும் இந்த விஷயத்தை ஸந்தேஹத்திற்கு இடமில்லாமல் தெளிவுபடுத்தும்.

Thursday, 28 November 2013

வேதத்தில் சிவநாமத்தின் ஸ்தானம்

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) - தெய்வ தத்வம் தெய்வங்கள்.

விலையுயர்ந்த ரத்னமொன்று நம்மிடமிருந்தால் வீட்டிலே எங்கே வைப்போம்? வாசல் புற ரூமில் வைப்போமா? தோட்டத்தைச் சேர உள்ள ரூமில் வைப்போமா? ரொம்பவும் காபந்தமாக மத்தியில் இருக்கிற ரூமில் இரும்புப் பெட்டியில்தான் வைப்போம். அப்படியே வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலில் மத்தி இரண்டாவது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வவேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்றை மட்டும் 'த்ரயீ' என்பதுண்டு. அப்போதும் ரிக்குக்கும் ஸாமத்துக்கும் நடுவில் வருது யஜுஸே. யஜுஸிலேயே சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், என்று இரண்டு இருப்பதால் நாலு வேதத்தை நாலு வேதத்தை ஐந்து என்று ஆக்கினாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வம் என்ற ஐந்தில் நட்ட நடுவாக வருவது மூன்றாவதான க்ருஷ்ண யஜுஸ்தான் இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் அதன் நாலாவது காண்டம். அந்தக் காண்டத்தின் மத்யம் ஐந்தாவது ப்ரச்னம். இதிலேதான் நடுவில் ஸ்ரீ ருத்ர ஸூக்தம் என்படுவதில் நடுநாயகமாக பஞ்சாக்ஷரம் வருகிறது. அந்த பஞ்சாக்ஷரத்துக்கும் மையமாக 'சிவ' என்ற த்வயக்ஷரம் இருக்கிறது.

Wednesday, 30 October 2013

Sri Chandrasekharendra Saraswathi Upanishad (Deivathin Kural)

By compiling the speeches of the sage of Kanchi, Ra. Ganapathi has provided an immortal link. 

In his last letter to G. Vaidyanathan, Secretary, Sankara Bhakta Jana Sabha, Ra. Ganapathi, prolific writer and compiler of “Deivathin Kural,” has narrated how difficult it was for him to gather the speeches of Paramacharya, add references to them and give them continuity. (‘Naan patta kashtam solli mudiyathu!’ he wrote.)

“Yes, but for Ra. Ganapathi, Kanchi Mahaswami’s speeches would not have reached the masses,” says Vaidyanathan. “He noted down Periyava’s talks and made cross-references, spoke to the people who knew the subject and got the required clarifications. Periyava would speak about one subject in one place and would leave it at that. Then again he would pick up the thread and speak in detail about it in some other venue. The challenge was to maintain the link. Ganapathi had a sharp memory and was alert in his observation. He would give final shape to the article and there would be no ambiguity in it!” he recalls.

Tuesday, 22 October 2013

பித்ரு கடன் - நரகவாஸிக்கும் நலன்

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

மஹாபாபத்தைச் செய்துவிட்டு நரக வாஸிகளாயிருப்பவர்களிடமும் அன்பு பாராட்டி,  அவர்களுக்கும் உபகாரம் செய்யச் சொல்வது நம் சாஸ்த்ரம்.  அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன். 

நரகவாஸியாக இருப்பவர்களுக்குக்கூட, நம் சாஸ்திரப்படி பரோபகாரம் நடக்கிறது.

திவஸமும், தர்ப்பணமும் செய்கிறபோது பூலோகத்திலோ வேறு எங்கோ, எந்த ரூபத்திலோ பிறந்திருக்கிற நம் மூதாதைகளுக்கு அது க்ஷேமத்தைக் கொடுக்கிறது. இங்கே நாம் கொடுக்கிற எள், தண்ணீர், பிண்டம் முதலானவைகளைப் பித்ரு தேவதைகள் நம் மூதாதைகள் எந்த ரூபத்தில் எங்கே பிறந்திருந்தாலும், அதற்கேற்ற ஆஹாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்து விடுவார்கள். நம் நாட்டு ரூபாயை வெளிதேசக் கரன்ஸியாக்க எக்ஸ்சேஞ்ச் பாங்க் இருக்கிற மாதிரி பித்ரு தேவதைகள் இப்படி ஆஹாரத்தை மாற்றிக் கொடுக்கிறார்கள்.

இந்த தேசாசாரம் ஜனங்களின் ரத்தத்தில் அடியோடு வற்றிப் போய்விடாததால் இன்னமும் அநேகமாக எல்லாரும் ரொம்பச் சுருக்கமாகவாவது பித்ரு கார்யங்கள் திவஸம், தர்ப்பணம் முதலியவற்றைச் செய்து வருகிறார்கள். ஆனால் சிரத்தைதான் போய்விட்டது. பித்ரு காரியங்களுக்கு 'ச்ராத்தம்' என்று பேர் இருப்பதே அதற்கு ச்ரத்தை முக்யம் என்பதால்தான். ச்ரத்தை இருந்தால் இப்படி சுருக்கமாகவும், குறுக்கியும், ச்ராத்தகாலம் தப்பியும் பண்ணுவது போலில்லாமல் யதோக்தமாக, புஷ்களாமாக நடக்கும். பலனும் ப்ரத்யக்ஷமாகத் தெரியும். என்ன பலன் என்றால் சொல்கிறேன். இப்போது பெரும்பாலோர் ஏதோ ஒப்புக்குத்தான் பித்ரு கார்யங்கள் பண்ணுகிறார்கள். பாக்கியிருப்பவர்களோ மேலும் துணிந்து 'ஸூப்பர்ஸ்டிஷன்' என்றே இவற்றை அடியோடு நிறுத்தியிருக்கிறார்கள். இதன் விபரீத பலன் எனக்குத்தான் தெரியும். அநேக வீடுகளில் சித்தப்பிரமம், அபஸ்மாரம் (காக்காய் வலிப்பு) , இன்னும் போன தலைமுறைகளில் கேள்வியே படாத அநேக ரத்த வியாதிகள், nervous disease- களுடன் அநேகர் அவஸ்தைப் பட்டுக் கொண்டு ஜோஸ்யர், ஆரூடக்காரர், மாந்த்ரிகர் எல்லாரிடமும் போய்விட்டு என்னிடம் வருகிறார்களே - இந்த கஷ்டங்களுக்குப் பெரும்பாலும் காரணம் பித்ரு கார்யங்களை விட்டு விட்டதுதான். ''மாதா பிதாக்கள் உயிர் போனபின் அவர்களுக்காக மக்கள் செய்யாதது மக்களைத் தாக்கும்'' என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அப்பாவும், அம்மாவும் மற்ற வம்ச முதல்வர்களும் எங்கேயாவது கோபித்துக் கொண்டு சபிப்பார்களா என்று கேட்கக் கூடாது. பித்ருக்கள் சபிக்காமலிருக்கலாம். ஆனால் பித்ரு தேவதைகள் இருக்கிறார்களே, அவர்கள் இந்தப் பின் தலைமுறையினர் தங்கள் மூலமாக முன்னோர்களுக்கு எள்ளோ, தண்ணியோ, அன்னமோ அளிக்கவில்லையே என்பதைப் பார்த்துச் சபித்துவிடுவார்கள். ஆனபடியால் நாமும் நம் பின்ஸந்ததியும் நன்றாயிருக்கவே முன் தலைமுறையினருக்கு திவஸ தர்ப்பணாதிகள் பண்ணத் தான் வேண்டும். அதாவது இங்கே பரோபகாரத்தோடு ஸ்வய உபகாரமும் சேருகிறது.

கார்த்திகை தீப தத்வம் Karthigai Deepa Tatvam

Scroll down to read in English

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.

கீடா: பதங்கா: மசகா: ச வ்ருக்ஷா:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி யேவா: |
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா:
ஸுகின: பவந்து ச்வபசா: ஹி விப்ரா: ||

''புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராம்மணனோ பஞ்சமனோ எவனானாலும் ஸரி, எதுவானாலும் ஸரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்'' என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்.

Wednesday, 21 August 2013

ஆசாரம் - வஜ்ரம் பாய்ந்த விருக்ஷம்

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

பூர்விகர்கள் ஒழுகிய வழியில் போவதற்கே 'ஆசாரம்' என்று பெயர். ஆசார-வ்யவஹாரங்கள் என்று சொல்வதுண்டு. வ்யவஹாரம் என்பது நிகழ்கால நடப்பாக மட்டும் இருப்பது. ஆசாரம் என்பது பூர்வத்தில் நெடுங்காலமாக நம் முன்னோர்கள் தங்கள் நன்னடத்தைக்கு ஆதாரமாக என்ன செய்தார்களோ அது. அதற்கு நீண்ட காலம் நிலைத்து நின்றதால், நெடுங்கால மரத்தில் உண்டாகிற வஜ்ரம் போன்ற உறுதி உண்டு. அந்த உறுதியான அஸ்திவாரத்தின் மேல் நாமும் நம் வாழ்முறையை எழுப்பிக்கொண்டால்தான் நமது வாழ்க்கை ஸ்திரமாக இருக்கும்.

நம் பூர்விகர்கள் எப்படிப்பட்ட நெறிகளைக் கைக் கொண்டிருந்தார்களென்றால், நம் சாஸ்திரங்களிலும் ஸம்பிரதாயங்களிலும் என்னென்ன உண்டோ அவற்றைத் தான். அவற்றை அவர்கள் அநுஷ்டித்த சிறப்பினால்தான் நம் தேசமே தொன்றுதொட்டுப் பாரமார்த்திகத்திலும், ஞானத்திலும், பக்தியிலும், அது மட்டுமின்றி எல்லாக் கலைகளிலுங்கூட லோகத்திலேயே முதன்மை ஸ்தானம் பெற்றிருக்கிறது. இன்றைக்கு நாம் இவ்வளவு சீரழிந்துவிட்ட பிறகுங்கூட நாம்தான் ஆத்யாத்மிகத்தில் தங்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று மற்ற தேசத்தவர்கள், மற்ற மதஸ்தர்கள் இங்கே உள்ள ஆச்ரமங்களுக்குக் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது பூர்வாசாரம் 'பெடல்' பண்ணிவிட்ட வேகத்தின் எஞ்சிய பலத்தால்தான்!

Thursday, 1 August 2013

"தெய்வத்தின் குரல்" அமரர் திரு ரா.கணபதி

அப்பா சொல்லைத் தட்டமுடியாமல் ஓரிக்கைக்கு வந்தார் கணபதி. அங்கே பெரியவா இருந்த சின்ன அறையில் வெளிச்சம் கூட இல்லை. அவரும் ஏதோ காஷாயம் சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கணபதிக்கு அங்கே எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. என்ன இவர்... கோயில் வாசலில் இருக்கும் ஆண்டியைவிட சாதாரணமா இருக்காரே என்ற எண்ணம்!

அறைக்குள் நுழைந்தது முதல், வைத்த கண் எடுக்காமல் கணபதியைப் பார்த்துக்கொண்டிருந்த மகா பெரியவா, சிறிது நேரம் கழித்துப் 'போகலாம்’ என்று உத்தரவு கொடுத் ததும்தான் 'அப்பாடா’ என்றிருந்தது கணபதிக்கு.

இருந்தாலும், வீடு திரும்பிய பின்னரும் கணபதியின் மனசு பூராவும் பெரியவா நினைப்பே சுழன்று சுழன்று வந்தது. எங்கே திரும்பினாலும் பெரியவா இருக்கிற மாதிரி ஒரு பிரமை! 'பெரியவா என்னைத் தடுத்தாட்கொண்டு இருக்கார்னு புரிஞ்சுது. அதன் பிறகு என் வாழ்க்கையே திசை திரும்பிடுச்சு!’ என்று கூறியிருக்கிறார் கணபதி. அதன் பிறகு, 'கல்கி’ பத்திரிகையுடன் தொடர்பு ஏற்பட்டு, சதாசிவம், எம்.எஸ் தம்பதியின் கருணை வட்டத்தில் வந்து விட்டார். சில காலம் கழித்து, மடத்துக்கு மீண்டும் அறிமுகமாகி, பெரியவா சொல்வதைக் குறிப்பு எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

Thursday, 27 June 2013

பக்தி - இஷ்ட தேவதை

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

மநுஷ்யர்கள் மனப்பான்மைகள் பல தினுசாக இருக்கின்றன. ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளவர்களையும் ஆகர்ஷித்து, அவர்களைப் பக்தி செலுத்த வைத்து, அவர்கலுடைய மனத்தைச் சுத்தம் செய்து, சித்தத்தை ஏகாக்ர (ஒருமை) ப்படுத்தவே பரமாத்மா பல பல தேவதா ரூபங்களாக வந்திருக்கிறது. இந்த ஹிந்துக்களுக்கு எத்தனை கோடி சாமிகள். என்று அந்நிய மதஸ்தர்கள் நம்மை கேலி செய்வதுண்டு. உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக விஷயம் தெரிந்த எந்த ஹிந்துவும் எண்ணவில்லை. வைதிக மதம் ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை. இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமிதான் என்று வேறெந்த மதமும் கண்டுபிடிக்காததையும் கண்டுபிடித்திருக்கிறது. எனவே, பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகா சக்தியாக ஒரு ஸ்வாமிதான் இருக்கிறது என்பதில் எந்த விஷயமறிந்த ஹிந்துவுக்கும் சந்தேகமில்லை. ஆனால் அந்த ஸ்வாமி பல ரூபத்தில் வரமுடியும். அப்படிப்பட்ட யோக்கியதையும் கருணையும் அதற்கு உண்டு என்று இவன் நம்புகிறான். 

Monday, 24 June 2013

பக்தி - ஆலயங்களின் தூய்மை

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

பேட்டைக்குப் பேட்டை, காலனிக்குக் காலனி புதுக் கோயில்கள் கட்டுகிறார்கள். எங்கே பார்த்தாலும் பழைய கோயில்களையும் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்கிறார்கள். புதுக்கோயில், பழைய கோயில் கும்பாபிஷேகங்களுக்காக என்னிடம் பலர் வந்து யோசனையும், பிரஸாதமும் கேட்டபடி இருக்கிறார்கள். இது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

அதே சமயத்தில் என் மனசுக்கு நிரம்ப வருத்தம் தருகிற விஷயங்களையும் பல பக்தர்கள் வந்து தெரிவித்துக் கொள்கிறார்கள். வேறு யாரிடமும் சொல்லிக்கொள்ள முடியாமல் ஸ்வாமிகளிடம் சொல்லலாம் என்று என்னிடம் வந்து முறையிடுகிறார்கள். இவற்றுக்கு நான் பரிகாரம் தேட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். மற்றவர்கள் வெளியே சொல்லத் தயங்குகிற இந்த விஷயங்களை நானும் கூடச் சொல்லாமல் இருக்கக்கூடாது. எனக்கு எல்லோரும் சொந்தம். ஸ்வாதீனப்பட்ட மநுஷ்யர்கள் என்றால், நான் அவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் எனக்கு நல்லது கெட்டது என்று தோன்றுவதைச் சொல்லத்தான் வேண்டும். எனவே மனசு விட்டு இப்போது சொல்கிறேன்.