Contact Us

Name

Email *

Message *

Sunday 31 July 2016

Atmarpanastuti - Sloka 32


अत्यन्तार्तिव्यथितमगतिं देव मामुद्धरेति
क्षुण्णो मार्गस्तव शिव पुरा केन वाऽनाथनाथ ।
कामालम्बे बत तदधिकां प्रार्थनारीतिमन्यां
त्रायस्वैनं सपदि कृपया वस्तुतत्त्वं विचिन्त्य ॥ ३२॥

அத்யந்தார்தி வ்யதிதமகதிம் தேவ மாமுத்தரேதி 
க்ஷுண்ணோ மார்க்கஸ்தவ சிவ புரா கேன வா நாதநாத | 
காமாலம்பே பத தததிகாம் ப்ரார்த்தனா ரீ திமன்யாம் 
த்ராயஸ்வைநம் ஸபதி க்ருபயா வஸ்துதத்வம் விசிந்த்ய || 32 || 

ஹே ஈச்வர! நான் கணக்கிட முடியாத கிலேசங்களால் பீடிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் கதியில்லை. என்னை இந்த துக்கஸாரத்திலிருந்து கரையேற்றிவிடு என்றவாறு உன்னிடம் பிரார்த்தனை செய்து கொள்ளும் ரீதியானது எந்தப் புண்ணியவானால் தொடங்கப்பட்டதோ! அதுவே அநாதிகாலமாய் அநாதைகளுக்கு பிரார்த்தனா ரீதியாக வழங்கி வருகிறது. ஆதலால் நானும் அவ்வழியையே பின்பற்றி எனது துக்கங்களை உன்னிடம் தெரிவித்துக்கொண்டு உன்னை ரக்ஷகன் என்று சரணமடைகிறேன். இப்புராதன ரீதியைவிட்டு வேறு புதிதாய் உன்னிடம் பிரார்த்தனை செய்து கொள்ளும் ரீதியை நான் எவ்விதம் அநுஷ்டிக்க முடியும்? இந்த நிலையை யுணர்ந்து என்னை நீ உடனே தயவுடன் காப்பாற்ற முன்வர வேண்டும் ஈச்வர! ‘நான்’ அநாதை, பாபி, துக்கிதன், எனக்கு உன்னைத் தவிர வேறு கதி கிடையாது, நீ தான் என்னை ரக்ஷிக்க வேண்டும்.’ என்றுதான் பக்தர்கள் உன்னை வேண்டிக் கொள்ளுவது வழக்கம். அப்படியேதான் நானும் உன்னை வேண்டிக்கொள்ளுகிறேன். ஒரு ஜீவன் ஈசனிடம் தன் பரிதாபத்தையும் பிரார்த்தனையையும் தெரிவித்துக்கொள்ள வேறு வழி கிடையாது. அநாதிகாலமாய் சரணமடைந்த பக்தர்களை ரக்ஷித்த நீ என்னையும் ரக்ஷிப்பாயாக.

atyantArtivyathitamagatiM deva mAmuddhareti
kShuNNo mArgastva shiva purA kena vA&nAthanAtha |
kAmAlambe bata tadadhikAM prArthanArItimanyAM 
trAyasvainaM sapadi kRupayA vastutattvaM vichintya || 32 ||

O Lord, has anyone made unavailable the path of surrender to You in the form “uplift me who am tormented by extreme suffering and am without any recourse”, O Protector of the helpless! (The idea is that this path is always available). What method of prayer greater than this can I adopt? Considering the actual state of things, save me immediately by Your compassion. (The path of total surrender is stressed as superior to the other paths).



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment