Contact Us

Name

Email *

Message *

Friday 27 July 2018

Soundarya Lahari - Sloka: 91


Beneficial Results: 
பூமி லாபம்; தன லாபம் Buying of lands, obtaining riches, contact with great men and scholars. Patronage and mass support.

पदन्यासक्रीडापरिचयमिवारब्धुमनसः 
स्खलन्तस्ते खेलं भवनकलहंसा न जहति । 
अतस्तेषां शिक्षां सुभगमणिमञ्जीररणित- 
च्छलादाचक्षाणं चरणकमलं चारुचरिते ॥ ९१॥

தேவியின் நடையழகு [பூமி லாபம்; தன லாபம்]

பதந்யாஸக்ரீடா பரிசயமிவாரப்து மநஸ: 
ஸ்கலந்தஸ்தே கேலம் பவநகலஹம்ஸா ந ஜஹதி |
அதஸ்தேஷாம் சிக்ஷாம் ஸுபக மணிமஞ்ஜீர ரணிதச்
சலாத் ஆசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே || 91 ||

அம்பிகே!, உன் இல்லத்திலிருக்கும் அன்னபக்ஷிகள் உன்னுடைய அழகிய நடையைக் கண்டு அம்மாதிரி தாமும் நடக்க கற்றுக்கொள்ளூம் எண்ணத்துடன் உன்னைப் பின்பற்றி நடக்கப் பழகுகின்றன. அவ்வாறு அவை உனது நடையழகைப் பின்பற்ற முயற்சிக்கையில் நீ அணிந்திருக்கும் பாதரசமணிகளின் இனிய சப்தமானது அந்த பக்ஷிகளுக்கு நடக்கச் சொல்லிக் கொடுப்பது போல இருக்கிறது.

கவிஞர்கள் அன்னபக்ஷியின் நடையை அழகிய பெண்களது நடைக்கு ஒப்பாகச் சொல்வது வழக்கம். இப்பாடலில் அன்னபக்ஷிகளே அன்னையிடத்தில் நடக்கக் கற்றுக் கொள்ளுவதாகக் கூறுவதன் மூலம் அன்னையின் நடையழகை சிறப்பாகக் கூறுகிறார். அன்னை காலில் அணிந்திருக்கும் தண்டை மற்றும் கொலுசுகளின் மூலம் ஏற்படும் சுநாதமானது அன்னையது நடையழகை பக்ஷிகளுக்கு கற்றுத்தருவது போல இருக்கிறதாம்.

இங்கே 42ஆம் ஸ்லோகத்தில் அன்னையின் க்ரீடம் பற்றி ஆரம்பித்து இப்பாடலுடன் அன்னையின் அங்க வர்ணனை முடிவுக்கு வருகிறது. இனிவரும் ஸ்லோகங்கள் பொதுவான ஸ்தோத்ரங்களாக இருக்கும்.

சாரு சரிதே - அழகிய சரித்திரத்தை உடையவளே!, தே பவந கலஹம்ஸா: உன் வீட்டிலிருக்கும் அன்ன பக்ஷிகள்; பதந்யாஸ க்ரீடா பரிசயம் - பாதங்களை அழகாக வைத்து நடக்க முயல்வதாக; ஆரப்து மநஸ: - ஆரம்பிப்பதாக நினைத்து;ஸ்கலந்த: - தடுமாறியபடி; தே கேலம் - உன்னைப் பின் தொடர்தலை; ந ஜஹதி - விடுவதில்லை; சரணகமலம் - பாதாரவிந்தங்கள்; ஸுபக மணி மஞ்ஜீர ரணிதச்சலாத் - அழகிய பாதரஸ மணிகளின் இனிய சப்தத்தின் மூலமாக; தேஷாம் சிக்ஷாம் - அந்த அன்னபக்ஷிகளுக்குச் சொல்லிக் கொடுப்பது; ஆசக்ஷாணம் இவ - சொல்வது போலிருக்கிறது.

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • ஸிஞ்ஜாநமணிமஞ்ஜீர  மண்டித  ஸ்ரீபதாம்புஜா
  • மராலீமந்தகமநா

padanyāsa-krīḍā paricaya-mivārabdhu-manasaḥ
skhalantaste khelaṃ bhavanakalahaṃsā na jahati |
atasteṣāṃ śikṣāṃ subhagamaṇi-mañjīra-raṇita-
cchalādācakṣāṇaṃ caraṇakamalaṃ cārucarite || 91 ||

She who has a holy life,
The swans in your house,
Follow you without break,
As if to learn ,
Your gait which is like a celestial play.
So thine lotus like feet,
Taking recourse to the musical sound,
Produced by gems in your anklets,
Appears to teach them what they want.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:91 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1243-1248 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)


Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment