Contact Us

Name

Email *

Message *

Saturday 18 November 2017

Soundarya Lahari - Sloka: 74



Beneficial Results: 
நற்கீர்த்தி Good fame
Attainment of fame, erudition and honour, support and protection.


वहत्यम्ब स्तम्बेरमदनुजकुम्भप्रकृतिभिः
समारब्धां मुक्तामणिभिरमलां हारलतिकाम् ।
कुचाभोगो बिम्बाधररुचिभिरन्तः शबलितां
प्रतापव्यामिश्रां पुरदमयितुः कीर्तिमिव ते ॥ ७४॥

மார்பில் விளங்கும் முத்துமாலை [நற்கீர்த்தி]

வயத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ கும்ப ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தா மாணிபிரமலாம் ஹாரலதிகாம் |
குசாபோகோ பிம்பாதர ருசிபிரந்த: சபளிதாம்
ப்ரதாப வ்யாமிச்ராம் புரதம்யிது: கீர்த்திமிவ தே || 74 ||

தாயே! உன்னுடைய ஸ்தனங்களின் மத்ய ப்ரதேசத்தில் கஜாஸுரனுடைய கும்பத்திலிருந்து உண்டான முத்துக்களால் கோர்க்கப்பட்ட ஹாரமானது விளங்குகிறது. அந்த முத்துக்களில் உன்னுடைய சிவப்பான அதர காந்தியானது படுவதால் வெளியில் சிவப்பாகவும், உள்ளுக்குள்ளே பலவித விசித்ர வர்ணன்களுடனும் இருக்கிறது. இந்த ஹாரமானது பரமசிவனுடைய பராக்ரமத்தை/கீர்த்தியை சொல்வதாக இருக்கிறது.

நமக்குத் தெரிந்தவரையில் முத்து என்பது சிப்பியிலிருந்து தோன்றுவது மட்டும் தான். ஆனால் கஜகும்பம், மூங்கில், பாம்புப்படம், மேகம், முத்துச் சிப்பி மற்றும் கரும்பு ஆகிய ஆறு இடங்களில் முத்துக்கள் விளைவதாகச் சொல்வர். இவற்றில் யானையிடத்திருந்து கிடைக்கும் முத்துக்கள் பல நிறங்கள் கலந்தவை என்றும் கூறப்படுகிறது.கஜாஸுரனைப் பரமசிவன் ஸம்ஹாரம் பண்ணியபின் அவனுடைய கும்பத்திலிருந்து கிடைத்த முத்துக்களை கோர்த்து அம்பிகை மாலையாக அணிந்ததாக சொல்லப்படுகிறது. அம்முத்துக்கள் பலவகையாக இருப்பினும் அவள் கழுத்தில் இருக்கும் போது அவளது அதரங்களின் அத்யந்த சிவப்பு நிறமானது சிவப்புடன் கூடி பல வர்ணங்களாக மாறுகிறதாம்.

சாதாரணமாக கீர்த்தி/புகழ் என்பதற்கு வெண்மை நிறத்தை குறிக்கிறார்கள். அதேபோல பராக்ரமம்/வெற்றி போன்றவைகளுக்கு சிகப்பை குறிப்பது கவிகளின் வழக்கமாம். இங்கே கஜாஸுரனுடைய ஸம்ஹாரம், த்ரிபுர சம்ஹாரம் போன்றவை பரமசிவனது பராக்ரமத்துக்கும், அவரது கீர்த்திக்கு ஸமமாக முத்து மாலையையும் குறித்திருக்கிறார் ஆதி சங்கரர்என்று சொல்கிறார் தேதியூரார்.

குசா போக: - ஸ்தனங்களின் மத்ய ப்ரதேசம்; ஸ்தம்பேரம தநுஜ கும்ப ப்ரக்ருதிபி: - கஜாஸுரனுடைய கும்பத்திலிருந்து உருவான; முதாமணிபி: - முத்து மணிகளால்; ஸமாரப்தாம் - நன்றாக சேர்க்கப்பட்ட; அமலாம் - தோஷமில்லாத; பிம்பாதர ருசிபி: - கோவைப் பழம்போல சிவந்த அதர காந்தியால்; அந்த: சபளிதாம் - உட்புறம் சித்ர வர்ணங்களோடு கூடியதாய்ச் செய்யப்பட்ட; ஹாரலதிகாம் - கொடிபோன்ற ஹாரத்தை; புரதமயிது: - புரங்களை அழித்தவரான ஈசனுடைய; ப்ரதாப வ்யாமிச்ராம் - பராக்ரமத்தோடு கலந்த; கீர்த்திமிவ - கீர்த்தியைப் போல; வஹதி - தரித்துக் கொண்டு.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 62

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • ரத்நக்ரைவேய சிந்தாக லோலமுக்தா பலாந்விதா

vahatyamba stmberama-danuja-kumbhaprakṛtibhiḥ
samārabdhāṃ muktāmaṇibhiramalāṃ hāralatikām |
kucābhogo bimbādhara-rucibhi-rantaḥ śabalitāṃ
pratāpa-vyāmiśrāṃ puradamayituḥ kīrtimiva te || 74 ||

Oh mother mine.
The center place of your holy breasts,
Wear the glittering chain ,
Made out of the pearls,
Recovered from inside the head of Gajasura,
And reflect the redness of your lips,
Resembling the Bimba fruits,
And are coloured red inside.
You wear the chain with fame,
Like you wear the fame of our Lord.
Who destroyed the three cities.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment