Contact Us

Name

Email *

Message *

Thursday 18 August 2016

Soundarya Lahari - Sloka: 43


Beneficial Results: 
அஞ்ஞான இருட்டு அகல Cure of ordinary diseases, success in all endeavours.
Enhances hair growth. Gains influence in society.


धुनोतु ध्वान्तं न-स्तुलित-दलितेन्दीवर-वनं
घनस्निग्ध-श्लक्ष्णं चिकुर निकुरुम्बं तव शिवे ।
यदीयं सौरभ्यं सहज-मुपलब्धुं सुमनसो
वसन्त्यस्मिन् मन्ये बलमथन वाटी-विटपिनाम् ॥ ४३ ॥

அஞ்ஞான இருட்டு அகல [இருள் நீக்கும் கருங்கூந்தல்]

துநோது த்வாந்தம் ந: துலித தளிதேந்தீவர வநம்
கந ஸ்நிக்த ச்லக்ஷணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே |
யதீயம் ஸெளரப்யம் ஸஹஜம் உபலப்தும் ஸுமநஸோ
வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதநவாடீ விடபிநாம் || 43 ||

ஹே! பார்வதி! மலர்ந்த நீலோத்பல புஷ்பங்களின் வனம் போன்றதும், அடர்த்தியானதும், வழவழப்பானதுமான உன் கேசமானது எங்களது மனதிலிருக்கும் அஞ்ஞான இருட்டைப் போக்கட்டும். அங்கே உன் கூந்தலில் இருக்கும் மலர்களானது கூந்தலில் உள்ள இயற்கையான பரிமள சுகந்தத்தை தாங்களும் அடைய்வதற்காக வந்திருக்கின்றன போலும்.

அன்னையின் கரிய கூந்தலானது நமது மனத்தில் இருக்கும் அஞ்ஞான இருட்டுக்கு உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் தங்களது கேசத்தில் மணம் சேர்வதற்கு பூ முடிப்பார்கள், ஆனால் அன்னையின் கூந்தலில் இருப்பதால்தான் இந்திரனது உத்யான வனத்துப் புஷ்பங்கள் கூட மணம் பெற்றது என்பது வர்ணனை. இவ்வாறாக, முந்திய பாடலில் பார்த்த கிரீட வர்ணனை முடிந்து இப்போது கூந்தல் வர்ணனை பண்ணியிருக்கார். இதற்கு தகுந்த சஹஸ்ர நாமம் 'புன்னாக செளந்திக லஸ்த்கசா' என்பது. இதற்கு பாஷ்யம் பண்ணின பாஸ்கர ராயர் இயற்கையான மணமுள்ள கூந்தலில் இம்மலர்கள் அலங்காரத்திற்கு மட்டுமேயன்றி, சாதாரண மனிதர்கள் போல் கேசத்திற்கு மணம் சேர்க்க அல்ல என்று கூறுகிறார்.

துலித தளிதேந்தீவர - மலர்ந்த புஷ்பங்களீன் வனத்திற்குச் சமமான; கந ஸ்நிக்த ச்லக்ஷ்ணம் - அடர்த்தியான, வழவழப்பான; தவ- உன்னுடைய; சிருர நிருகும்பம் - கேச அலங்காரம்; த்வாந்தம் - அஞ்ஞானம்; துனோது - போக்கடிக்கும்; யதீயம் - எவற்றின்; ஸஹஜம் - இயற்கையான; ஸெளரப்யம் - வாசனை; உபலப்தும் - அடைவதற்காக; வலமதந - வலன் என்ற அசுரனை வதைத்த இந்திரன்; வாடீ விடபினாம் - உத்தியான வனத்தில்; ஸுமநஸ: - புஷ்பங்கள்; மந்யே - நினைக்கிறேன்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 53

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • நீலசிகுரா 
  • சம்பகாசோகபுந்நாக 
  • ஸௌகந்திகலஸத்கசா
  • அஜ்ஞானத்வாந்த தீபிகா

dhunotu dhvāntaṃ na-stulita-dalitendīvara-vanaṃ
ghanasnigdha-ślakṣṇaṃ cikura nikurumbaṃ tava śive |
yadīyaṃ saurabhyaṃ sahaja-mupalabdhuṃ sumanaso
vasantyasmin manye balamathana vāṭī-viṭapinām || 43 ||

Oh, Goddess , who is the consort of Shiva,
Let the darkness of our mind be destroyed,
By the crowning glory on your head,
Which is of like the forest of opened blue lotus flowers,
And which is soft , dense and shines with luster.
I believe my mother,
That the pretty flowers of Indra’s Garden,
Are all forever there,
To get the natural scent of thine hair.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment