Contact Us

Name

Email *

Message *

Sunday 10 April 2016

Atmarpanastuti - Sloka 16


यः स्रष्टारं निखिलजगतां निर्ममॆ पूर्वमीश-
स्तस्मै वॆदानदित सकलान् यश्च साकं पुरणै: ।
तं त्वामाद्यं गुरुमहमसावात्मबुद्धिप्रकाशं 
संसारार्तः शरणमधुना पार्वतीशं प्रपद्यॆ ॥ १६ ॥

யஸ்ரஷ்டாரம் நிகிலஜகதாம் நிர்மமே பூர்வமீச:
தஸ்மை வேதாநதித ஸகலான் யஸ்ச ஸாகம் புரணை: |
தம் த்வாமாத்யம் குருமஹமஸாவாத்மபுத்திப்ரகாஸம் 
ஸம்ஸாரார்த்த: ஸரணமதுனா பார்வதீசம் ப்ரபத்யே || 16 ||

ஜகத்ஸ்ருஷ்டி கர்த்தாவான பிரமனை முதலில் சிருஷ்டித்து அவருக்கு வேதங்களை உபதேசித்த ஆதி குருவான பரமேஸ்வரனை தியானத்தினால் என் சித்தத்தில் நிறுத்தி என்னுடைய தாபங்களை விலக்கும் பொருட்டு அவரிடம் ஸரணாகதியடைகிறேன். சிருஷ்டி இருவகைப்படும். ஒன்று ப்ரகிருதி சிருஷ்டி. மற்றொன்று விக்ருதி சிருஷ்டி. ப்ரகிருதி சிருஷ்டியில் சிவனிடமிருந்து பிரமன் உண்டானது. சுருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஜீவன்களிடையே எவன் உன்னை ஸரணமடைகிறானோ அவனுக்கு ஞானத்தை அளித்து அவனுடைய கட்டை அவிழ்த்து விட்டு நித்யாநந்த பரிபூர்ணமான உன்னுடைய அப்ராக்ருதமான திவ்ய பதவிக்கு அவனை அழைத்துக் கொள்ளுகிறாய். ஆகையினால் உன்னை நான் சரணமடைகிறேன். புல் முதலியவற்றைத்தின்று விவேகமற்றவைகளாய் தன்னை வேலை வாங்கும் மனிதர்களுக்கு அடிமையாகி பார மிழுத்தல் முதலிய காரியங்களில் க்லேசமும் துக்கமுமடையும் மாடுகளைப் போல ஜீவன் அஜ்ஞானியாய் இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் கட்டுண்டு பலவித கஷ்டங்களை அடைகின்ற இந்த ஜீவன்களை கட்டவும் அவிழ்த்து விடவும் யஜமானன் பரமேஸ்வரனே.

yaH sraShTAraM nikhilajagatAM nirmamE pUrvamIsha-
stasmai vEdAnadita sakalAn yashca sAkaM puraNai: |
taM tvAmAdyaM gurumahamasAvAtmabuddhiprakAshaM 
saMsArArtaH sharaNamadhunA pArvatIshaM prapadyE || 16 ||

I, tormented by this transmigratory existence, now take refuge in You, the Lord who first created the Creator of all the worlds (BrahmA) and imparted to him the Vedas along with the purANas, who are the Lord of Goddess pArvatI, the primordial Guru who confer self knowledge.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment