Contact Us

Name

Email *

Message *

Wednesday 18 February 2015

Soundarya Lahari - Sloka: 6


Beneficial Results: 
புத்ர சந்தானம் Getting sons as progeny
Cures impotency, bestows children.


धनुः पौष्पं मौर्वी मधुकरमयी पञ्च विशिखाः
वसन्तः सामन्तो मलयमरु-दायोधन-रथः ।
तथाप्येकः सर्वं हिमगिरिसुते कामपि कृपां
अपाङ्गात्ते लब्ध्वा जगदिद-मनङ्गो विजयते ॥ ६ ॥

கடைக்கன் பார்வை/புத்ர சந்தானம்

தனு: பெளஷ்பம் மெளர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா: 
வஸந்த: ஸாமந்தோ மலயமரு-தாயோதன-ரத: |
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸிதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித-மனங்கோ விஜயதே || 6 ||

மன்மதன் தன் கையில் வைத்திருக்கும் வில் புஷ்பத்தால் ஆனது. அந்த வில்லின் நாண் வண்டுகளால் ஆனது. வில்லினால் செலுத்தும் பாணங்கள் எல்லாமும் புஷ்பங்களே (ஐந்து பாணங்கள்). மன்மதனின் மந்திரி வசந்த ருது. மன்மதனின் ரதம் மலைய மாருதம் எனப்படும்தென்றல் காற்று. இவ்வாறாக மன்மதனின் ஆயுதங்கள் எல்லாம் வலிவில்லாதவைதாம், ஆனாலும் மலையரசன் பெண்ணே, உனது கடைக்கண் பார்வையால் பெற்ற அருளால் அன்றோ மன்மதன் தனித்து நின்று இவ்வுலகனைத்தையும் வெற்றி கொள்கின்றான்!.

ஹிமகிரிஸீதே - மலையரசன் பெண்ணே; (தனு:) வில் (பெளஷ்பம்) மலர்களாலானது (விசிகா:) பாணங்கள் (பஞ்ச) ஐந்தும் பூக்களே; (ஸாமந்த:)மந்திரி (வஸந்த) வஸந்த ருது; (ஆயோதனரத:) போர் செய்ய ஏறிவரும் தேர்; (மலயமருத்) மலயத்திலிருந்து வீசும் தென்றல் காற்று (ததா அபி)அப்படியிருந்தும் (அனங்க:) உடலில்லாத மன்மதன் (ஏக:) ஒருவனாகவே (தே) உன்னுடைய (அபாங்காத்) கடைக்கண் பார்வையால் (காம் அபி க்ருபாம்) ஏதோ ஒரு கிருபையை (லப்த்வா) அடைந்து (இதம்) இந்த (ஜகத்) உலகம் (ஸர்வம்) அனைத்தையும் (விஜயதே) ஜெயிக்கிறான்.

மன்மதன் ரூபமற்றவனாக இருந்தாலும், அவன் மிகச் சிறந்த ஸ்ரீவித்யா உபாசகன். இப்படிப்பட்ட மந்த்ரத்ஷ்டாவான ரிஷி (மன்மதன்) பற்றியஞானம் இல்லாதவன் ஸ்ரீசக்கர பூஜையில் ப்ரவேசிக்கக் கூடாது என்று யஜீர்வேதமும் கூறுகிறது.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 17

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • காமகலாரூபா


dhanuḥ pauṣpaṃ maurvī madhukaramayī pañca viśikhāḥ
vasantaḥ sāmanto malayamaru-dāyodhana-rathaḥ |
tathāpyekaḥ sarvaṃ himagirisute kāmapi kṛpāṃ
apāṅgātte labdhvā jagadida-manaṅgo vijayate || 6 ||

Oh ,daughter of the mountain of ice,
With a bow made of flowers,
Bow string made of honey bees,
Five arrows made of only tender flowers,
With spring as his minister,
And riding on the chariot of breeze from Malaya mountains
The god of love who does not have a body,
Gets the sideways glance of your holy eyes,
And is able to win all the world alone.



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment