Contact Us

Name

Email *

Message *

Tuesday 31 December 2013

போதும் என்று நினையுங்கள்!


உங்களுக்கு பிடித்தமான தெய்வத்தை வணங்கலாம். ஒரே தெய்வத்தை வணங்குவதால் மனம் ஒருமுகப்படும்.

மற்றவர்கள் வணங்கும் தெய்வங்களை தாழ்வாக எண்ணுவது கூடாது.

கீழே விழுந்து தெய்வத்தை வணங்கும் காரணம் தெரியுமா? உடல் கூட தெய்வத்திற்குரியது தான் என்பதை உணர. இந்த உடல் எனக்குரியது என்ற அகந்தையை விட்டொழிக்க.

பெண்ணுக்கு சீதனமாக மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கக்கூடாது. பெண்ணைப் பெற்றவர்கள் விரும்பிக் கொடுத்தாலும் வாங்கக் கூடாது.

நமக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கக்கூடாது. நிம்மதியாக வாழ்வதற்காக தேவையான அளவு பணம் சம்பாதித்தால் போதும்.

ஆடம்பமாக வாழ்வது இன்றைய நடைமுறையாகி விட்டது. போதும் என்ற மனநிலையை அடைந்தால் இந்த நிலை மாறும்.

No comments:

Post a Comment