Contact Us

Name

Email *

Message *

Monday 1 July 2013

பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 6

இத்தனை மகிமை வாய்ந்த பத்ரினாத் ஆலயம் அமைப்பு எப்படியானது? அங்கு சென்று அவரை எப்படி வணங்குவது என்பதை எனக்கு விளக்குவீர்களா என அருந்ததி வசிஷ்டரிடம் கேட்க வசிஷ்டர் தொடர்ந்து கூறத் துவங்கினார்.

பத்ரினாத் ஆலயத்தின் எதிரே அமைந்துள்ள இரண்டு பர்வதங்களில் நர மற்றும் நாராயணன் என்ற இரண்டு முனிவர்கள் தவம் இருந்தார்கள் அவர்கள் வேறு யாரும் அல்ல கிருஷ்ணரின் இரண்டு அவதாரங்களே. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணராக அவதரித்தவரும் அந்த யுத்தத்தில் பங்கு கொண்ட அர்ஜுனனுமே அவர்கள் ஆகும். அந்த இருவரும் தவம் இருந்த அந்த இந்த இரண்டு மலைகளையும் நர நாராயண மலையென்று அழைக்கின்றனர். நரநாராயணர்கள் என்பவர்கள் ஒருவரே ஆவார். அவரே விஷ்ணு பகவான்.
 பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 6

No comments:

Post a Comment