Contact Us

Name

Email *

Message *

Sunday 17 January 2016

Atmarpanastuti - Sloka 4


आनन्दाब्धैः कमपि च घनीभावमास्थाय रूपं 
शक्त्या सार्धं परममुमया शाश्वतं भोगमिच्छन् । 
अध्वातीते शुचिदिवसकृत् कोटिदीप्रे कपर्दिन् 
आद्ये स्थाने विहरसि सदा सेव्यमानो गणेशैः ॥ ४ ॥

ஆனந்தாப்தை: கமபி ச கனீபாவமாஸ்தாய ரூபம் 
 சக்த்யா ஸார்த்தம் பரமமுமயா சாச்வதம் போகமிச்சன் | 
அத்வாதீதே சுசி திவஸக்ருத் கோடிதீப்ரே கபர்தின் 
ஆத்யே ஸ்தானே விஹரஸி ஸதா ஸேவ்யமானோ கணேசை: || 4 || 

முன் சுலோகத்தில் இந்திரன் முதல் மும்மூர்த்தி வரையிலுள்ள ஸகல தேவர்களும் எவருடைய சக்தி லேசத்தில் முடிவடைகின்றனரோ, வேதங்களால் உணர்ந்தோதற்கரிய அவ்வித ஆதி தேவனாகிய பரமேசுவரனுக்கு, எவ்வித ஸ்வரூபம், எந்த ஸ்தானம், எவ்வித பரிவாரங்கள் என்பதை இந்த சுலோகத்தில் விரித்துரைக்கின்றார். அரூபமான பரமேசுவரனும் லோகானுக்ரஹத்தின் பொருட்டு லீலா விக்ரஹமெடுத்துக் கொள்ளுகிறார் என்பது சாஸ்திரங்களின் கொள்கை. ஜலம் உறைந்து பனிக் கட்டியாவது போல் ஆனந்த வெள்ளம் கெட்டியாகி ஒரு ஸ்வரூபமானது என்று சொல்லக்கூடியது பரமேசுவரனின் ஸ்வரூபம். அவருடைய சக்தியே உமையாகி அவரோடு சேர்ந்தது. அவர் இருப்பதோ கோடி ஸூர்யப்ரகாசமான ஒரு ஸ்தானம். அது ஸ்ருஷ்டிக்கு முன்னால் பரமேச்வரனின் இச்சையால் ஆனது. அந்த ஸ்தானம் அத்வாக்கள் என்ற தத்துவங்களுக்கு அப்பாலுள்ளது. வர்ண, பத, மந்த்ர, புவன, தத்வ, கலா என்பன ஆறு அத்வாக்கள், மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிபூர, அனாஹத, சிவபதமடைய வேண்டியவர் செல்ல வேண்டும். அந்த ஸ்தானத்தில் தன் அம்சம் பொருந்தின சிறந்த கணங்களால் ஸேவிக்கப்படுகிறார்.

AnandAbdhaiH kamapi cha ghanIbhAvamAsthAya rUpaM 
shaktyA sArdhaM paramamumayA shAshvataM bhogamichChan | 
adhvAtIte shuchidivasakRut koTidIpre kapardin 
Adye sthAne viharasi sadA sevyamAno gaNeshaiH || 4 ||

Taking on an indescribable solidified form of the ocean of Bliss, desiring eternal supreme enjoyment with Your consort Uma, O Lord with matted hair, You ever sport in the primordial place, beyond the reach of speech and mind, which shines like a crore of suns and moons, served by the lords of the gaNas. (The idea brought out here is that Brahman who is pure Bliss and without form takes a form by his mAyA for blessing devotees, as stated in Shankara Bhagavatpada’s bhashya on Brahma sutra 1. 1. 20.)



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment