Contact Us

Name

Email *

Message *

Thursday 6 December 2018

Soundarya Lahari - Sloka: 100


Beneficial Results: 
ஸகல ஸித்தி All round success, freedom from diseases and accomplishment of all desires.
Retrieving lost property, gaining control of belongings and contentment

प्रदीपज्वालाभिर्दिवसकरनीराजनविधिः
सुधासूतेश्चन्द्रोपलजललवैरर्घ्यरचना ।
स्वकीयैरम्भोभिः सलिलनिधिसौहित्यकरणं
त्वदीयाभिर्वाग्भिस्तव जननि वाचां स्तुतिरियम् ॥ १००॥

தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது, சூரியனுக்கு அவன் கிரணத்து அக்கினியால் தீபாராதனை செய்தது போலாம் [ஸகல ஸித்தி]

ப்ரதீப ஜ்வாலாபி: திவஸகர நீராஜந விதி: 
ஸுதாஸூதே: சந்த்ரோபலஜல லவைராக்யரசனா |
ஸ்வகீயை ரம்போபி: ஸலில நிதி ஸெள்ஹித்யகரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ்தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம் || 100 ||

தாயே!, உன்னுடைய வாக்குகளால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்ரத்தினால் நான் உன்னைத் துதிப்பது கை தீவட்டிகளின் ஜ்வாலையால் ஸுரியனுக்கு ஹாரத்தி செய்வது போலும், அம்ருதத்தை வர்ஷிக்கும் கிரணங்களையுடைய சந்திரனுக்கு சந்திர காந்த கல்லின் ஜலத் துளிகளால் அர்க்ய ப்ரதானம் செய்வதாகவும், ஜப நிதியாகிய ஸமுத்திர ராஜனுக்கு அவனுடையதான ஜலங்களாலேயே தர்ப்பணம் செய்வது போல இருக்கிறது.

இந்த கடைசி ஸ்லோகத்தில் ஆசார்யார் தாம் இந்த ஸ்லோகத்தை அம்பாளுடைய அனுக்ரஹத்தினாலேயே செய்ததாகவும், அதில் தாம் ஒரு கெளரவமும் கொள்ளவில்லை என்று தனது விநயத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். ஸ்வகீயை: என்கிற பதத்தை ஸுர்யன், சந்திரன், ஸமுத்ரம் ஆகிய மூன்று இடத்திலும் சேர்த்தாலேயே இங்கே பொருள் வருகிறது. தீவட்டி ஜ்வாலையும் சூர்யனே; சந்திர காந்த கல்லின் ஜலத்திற்கு ஆதாரம் சந்திரனுடைய கதிர்களே; எல்லா நீர்கும் ஆதாரம் ஸமுத்ரமே; இதே போல சகல வாக்குகளுக்கும் அம்பிகையே ஜனனி என்று கூறுகிறார்.

ப்ரதீப ஜ்வாலாபி: - கைத் தீவட்டிகளின் ஜ்வாலையால்; திவஸகர நீராஜன விதி: - ஸுர்யனுக்கு ஹாரத்தி செய்வதுபோலும்; ஸுதாஸூதே: அம்ருதம் வர்ஷிக்கும் கிரணங்களிடைய சந்திரனுக்கு; சந்த்ரோபல ஜலவை: - சந்திர காந்த கல்லில் (சந்திர ஒளியால் ஏற்படும்) இருக்கும் நீர் போலவும்; ஸ்வகீயை: அம்போபி: தன்னுடைய ஜலத்தாலேயே; ஸலிலநிதி - நீருக்கு அதிபதியாகிய சமுத்திரத்துக்கு; ஸெளஹித்யகரணம் - தர்பணம் முதலியவைகளால் த்ருப்தி செய்வது போல;வாசாம் ஜநநி - வாக்குக்களுக்கு உத்பத்தி ஸ்தானமான தாயே; த்வதீயாபி - உன்னுடையதான; வாக்பி: வாக்குகளால் செய்யப்பட்ட; தவ இயம் ஸ்துதி: உன் பற்றிய இந்த ஸ்துதி;

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 8

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • பராமோதா
  • பசுபாஸ விமோசிநீ


pradīpa jvālābhi-rdivasakara-nīrājanavidhiḥ
sudhāsūte-ścandropala-jalalavai-raghyaracanā |
svakīyairambhobhiḥ salila-nidhi-sauhityakaraṇaṃ
tvadīyābhi-rvāgbhi-stava janani vācāṃ stutiriyam || 100 ||

Oh Goddess who is the source of all words,
This poem which is made of words,
That you only made,
Is like showing the camphor lamp to the Sun,
Is like offering as ablation to the moon,
The water got from the moon stone,
And is like offering water worship,
To the sea.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:100 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1243-1248 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment