Contact Us

Name

Email *

Message *

Friday 23 November 2018

Soundarya Lahari - Sloka: 99


Beneficial Results: 
பேரின்பம் Bliss
Getting valor, happiness and God's grace.
All kinds of enjoyments, attractive looks and the grace of God.

सरस्वत्या लक्ष्म्या विधिहरिसपत्नो विहरते
रतेः पातिव्रत्यं शिथिलयति रम्येण वपुषा ।
चिरं जीवन्नेव क्षपितपशुपाशव्यतिकरः
परानन्दाभिख्यम् रसयति रसं त्वद्भजनवान् ॥ ९९॥

ஆனந்த அமுதத்தை அனுபவிக்கும் அடியவர்கள் [பேரின்பம்] 

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதிஹரி ஸபத்னோ விஹரதே 
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா |
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசுபாசவ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவாந் || 99 ||

அம்மா!, உன்னை பூஜிப்பவன் பிரம்மாவும், விஷ்ணுவும் கூட பொறாமைப்படக் கூடிய அளவில் கல்வியிலும், செல்வத்திலும், இன்பத்திலும் சிறந்து விளங்குகிறான். உன்னை பூஜிப்பவனது அழகு மன்மதனுக்கு ஒப்பாக இருப்பதால் ரதி தேவியையும் தடுமாறச் செய்யக் கூடியதாக இருப்பதால் மன்மதனும் கலங்குகிறான். உன் பக்தன் சிரஞ்சிவியாக இருந்து கொண்டு பசு, பாச ஸம்பந்தங்களிலிருந்து விடுபட்டவனாக ப்ரஹ்மானந்த ஸுகத்தை அனுபவிக்கிறான்.

பராசக்தியை வழிபடுவதன் மூலமாக அவளது கருணாகடாக்ஷத்தில் பக்தனுக்கு ஞானம், செல்வம், செளந்தர்யம் ஆகிய மூன்றும் தாமாகவே கிடைத்துவிடுகிறது என்கிறார் பகவத் பாதர். இவ்வாறு இந்த மூன்றையும் பெற்ற பக்தன் லோக சுகங்களை அனுபவித்து சிரஞ்சிவியாக இருந்து கொண்டே பரலோக செளக்கியத்திற்கு முடிவான பிரம்மானந்தத்தை இங்கேயே அடைந்துவிடுகிறானாம். பசு என்பது ஜீவன், பாசம் என்பது மாயை, அவித்யை. பாசத்தில் பாதிக்கப்பட்ட ஜீவனான பக்தன் பஞ்சபூதத்தால் ஆன உடலை தான் என்று எண்ணாது, தனக்கும் பிரம்மத்திற்கும் உள்ள ஐக்யத்தை உணர்ந்து பாசத்தில் இருந்து விலகி பசு நிலையிலிருந்து பசுபதியின் ஜ்யோதி ஸ்வரூபத்தில் மனதை லயிக்கச் செய்து ப்ரம்மானந்ததை அடைகிறான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையே ஜீவன் -முக்தி நிலை என்றழக்கப்படும்.

த்வத் பஜநவாந் - உன்னை உபாசிக்கிறவன்; ஸரஸ்வத்யா - சரஸ்வதியிருப்பதால்; லக்ஷ்ம்யா - லக்ஷ்மியிருப்பதால்; விதிஹரி ஸபத்ன - ப்ரம்ஹா, விஷ்ணு இவர்களுடைய அஸுயைக்கு இடமாக இருந்து கொண்டு; விஹரதே - ஆனந்தமாக காலம் கழிக்கிறான்; ரம்யேண வபுஷா - ஸுந்தரமான ரூபத்தால்; ரதே பாதிவ்ரத்யம் - ரதீ தேவியின் பதிவிரதத்தை; சிதிலயதி - தளரச் செய்திடுவான்; சிரம் ஜீவன்நேவ - சிரஞ்சீவியாக இருந்து கொண்டு;க்ஷபித பசுபாச வ்யாதிகர; - பசு-பாசம் ஆகியவற்றின் ஸம்பந்தத்தை போக்கியவனாக; பராநந்தாபிக்யம் - பிரம்மானந்தம் என்னும் ஸுகத்தை; ரஸயதி - அனுபவிக்கிறான்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 8

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • பராமோதா
  • பசுபாஸ விமோசிநீ


sarasvatyā lakṣmyā vidhi hari sapatno viharate
rateḥ pativratyaṃ śithilapati ramyeṇa vapuṣā |
ciraṃ jīvanneva kṣapita-paśupāśa-vyatikaraḥ
parānandābhikhyaṃ rasayati rasaṃ tvadbhajanavān || 99 ||

Those who worship thee , oh mother,
Are so learned and so rich,
That even Brahma and Vishnu,
Are jealous of them
They are so handsome,
That even the wife of Cupid, Rathi,
Yearns for them.
He unbound from the ties of this birth,
Always enjoys ecstasic happiness,
And lives for ever .

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:99 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1243-1248 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment