Contact Us

Name

Email *

Message *

Tuesday 15 May 2018

Soundarya Lahari - Sloka: 86


Beneficial Results: 
சத்ரு ஜெயம் Subduing enemies
Warding off evil spirits, obtaining power and strength.
Gaining strength and infrastructure to attack and subdue enemies.

मृषा कृत्वा गोत्रस्खलनमथ वैलक्ष्यनमितं
ललाटे भर्तारं चरणकमले ताडयति ते ।
चिरादन्तःशल्यं दहनकृतमुन्मूलितवता
तुलाकोटिक्वाणैः किलिकिलितमीशानरिपुणा ॥ ८६॥

காமேச்வரன் வணக்கமும் காமனின் வெற்றியும்
[பிசாச பய நிவ்ருத்தி; சத்ரு ஜெயம்]

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலநமத வைலக்ஷ்ய நிமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே |
சிராத் அந்த: சல்யம் தஹனக்ருதம் உந்மூலிதவதா
துலாகோடி க்வாணை: கிலிகிலிதம் ஈசாநரிபுணா || 86 ||

அம்பிகே, விளையாட்டாக உனது பிறந்த வீட்டினைப் பற்றி ஏளனமாகச் சொன்ன பரமசிவனார், உன்னுடைய கோபத்தைக் கண்டு, என்ன செய்வதென்று தெரியாது உன்னை வணங்கிடுகிறார். அவ்வாறு வணங்கும் போது அவருடைய நெற்றியில் உன்னுடைய பாத கமலங்களில்பட்டு, உன்பாத 'சிலம்புகள் கிலி-கிலி'என்று ஒலியெழுப்புகின்றன. உன் பாதசிலம்புகள் ஏற்படுத்தும் அவ்வொலியானது மன்மதன் முன்பு ஒருமுறை சிவனாரின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த நெருப்பினால் பஸ்மமானதால் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை தீர்த்துக் கொள்ளுவது போல சிரிப்பதாக இருக்கிறது.

அம்பாளிடத்து சரஸம் செய்வதாக எண்ணி அவளுக்குக் கோபம் உண்டாகும்படியாக அவளது பிறந்த் வீட்டினை இகழ்ந்த பரமன், அதனால் கோபம் கொண்ட அம்பிகையை சமாதானம் செய்யும் விதமாக மன்னிப்புக் கேட்டு அவளது பாதங்களில் நமஸ்கரிப்பதாகவும், அப்போது சிவனது நெற்றி அன்னையின் பாதங்களில்பட்டு, அவள்காலில் இருக்கும் பாத சிலம்புகள் ஒலியெழுப்புவதாகவும் சொல்கிறார். மஹா-பதிவிரதையான அம்பிகை தனது பர்த்தா நமஸ்கரிப்பது என்பது ச்ருங்கார சாஸ்த்ரங்களின் ரீதியை அனுசரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார். முன்பு ஒருமுறை பரமசிவன் மன்மதனை எரித்த காரணத்தால் மன்மதனுக்கு பரமசிவனிடத்து இருந்த பகையானது உடம்பில் தைத்த பாணம் போன்று இருந்ததாகக் கூறுகிறார். தன்னை எரித்த பரமன் நெற்றி நிலத்தில்பட வீழ்ந்து வணங்குவது கண்ட மன்மதன் தானே அவரை ஜெயித்தது போன்று சிரித்து மகிழ்வது போல அன்னையின் பாதசிலம்புள் ஒலிக்கிறது என்கிறார்.

ம்ருஷா - விளையாட்டாக; கோத்ரஸ்கலனம் - பிறந்த வீடு பற்றிய ஏளனம்; க்ருத்வா - செய்தது; அத வைலக்ஷ்ய நமிதம் - அதனால் ஏற்பட்ட கோபத்தைக் கண்டு என்ன செய்வதென; பர்த்தாரம் - கணவரான பரமசிவன்; லலாடே - நெற்றியில்; தே சரணகமலே - உன் பாத-கமலங்களில்; தாடயதி சதி - (பாதங்களின்) மேலே பட்டு; ஈசான ரிபுணா - ஈசனின் விரோதியான மன்மதனால்; தஹநக்ருதம் - நேத்ராக்னியால் எரித்ததால் ஏற்பட்ட; சிராத் - வெகுகாலமாக இருக்கும்; அந்த: சல்யம் - தனது மனதில் பாணமாகப் பதிந்த பகையை; உந்மூலிதவதா - வேரோடு எடுத்து; துலாகோடிக்வாணை: - கால் சிலம்பில் இருக்கும் சிறிய மணிகளால் எழும் சப்தத்தை; கிலிகிலிதம் - கிலி-கிலி என்ற சப்தம்;

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 98

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • ஸிஞ்ஜாநமணிமஞ்ஜீர  மண்டித  ஸ்ரீபதாம்புஜா

mṛṣā kṛtvā gotraskhalana-matha vailakṣyanamitaṃ
lalāṭe bhartāraṃ caraṇakamale tāḍayati te |
cirādantaḥ śalyaṃ dahanakṛta munmūlitavatā
tulākoṭikvāṇaiḥ kilikilita mīśāna ripuṇā || 86 ||

In a playful mood,after teasing you,
About you and your family,
And at a loss to control your love tiff,
When your consort does prostrations,
Your lotus like feet touches his forehead,
And the God of love , the enemy of your Lord, who was burnt,
By the fire from his third eye,
And was keeping the enmity with your lord,
Like the ever hurting arrow,
Makes sounds like Kili Kili,
From your belled anklets on the legs.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment