Contact Us

Name

Email *

Message *

Friday 10 May 2013

புற்று நோயை குணமாக்கிய நாராயணீயம்

ஒரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, என்ன ரொம்ப வலிக்கிறதா?” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, கீழ்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறி அனுப்பினார். ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும் கண்ணீர் மல்க, பெரியவாளை தரிசித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். நன்னாயிட்டியே” என்றார், அந்த கலியுகத் தெய்வம். அந்த பக்தர், ஆமாம் நன்னாயிட்டேன். மருந்து எதுவும் வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்” என்றார் அவர்.

அந்த பக்தருக்கு வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு என்பதை, இதன் மூலம் மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் ஸ்ரீ மஹா பெரியவா.

Dasakam: 008 -- Slokam:13
अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं
निरुन्धि वातालयवास विष्णो ॥१३॥

asmin paraatman nanu paadmakalpe
tvamitthamutthaapita padmayOniH |
anantabhuumaa mama rOgaraashiM
nirundhi vaataalayavaasa viShNO || 13

O Supreme Lord of incomprehensible powers, in this age known as the Paadma Kalpa, Thou thus brought into existence the Creator Brahmaa. O Lord Vishnu! Who has manifested in the temple of Guruvaayur, please eradicate my ailments.

அஸ்மிந் பராத்மந், நநு பாத்ம கல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி
அநந்த பூமா மமரோக ராசிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ

பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.



No comments:

Post a Comment