Contact Us

Name

Email *

Message *

Monday 24 September 2018

Soundarya Lahari - Sloka: 95


Beneficial Results: 
இஷ்ட ப்ராப்தி Getting of all desires.
Relief from debts and sins, cure of nervous debility, gift of poesy.

पुरारातेरन्तःपुरमसि ततस्त्वच्चरणयोः
सपर्यामर्यादा तरलकरणानामसुलभा ।
तथा ह्येते नीताः शतमखमुखाः सिद्धिमतुलां
तव द्वारोपान्तस्थितिभिरणिमाद्याभिरमराः ॥ ९५॥

அமரேந்திரனுக்கும் அனுமதி மறுக்கும் அணிமை [இஷ்ட ப்ராப்தி]

புராராதே ரந்த்த:புரமஸி ததஸ் த்வச்சரண்யோ:
ஸபர்யா மர்யாதா தரளக்ரணாநாம் அஸுலபா |
ததா ஹ்யேதே நீதா: சத மக முகாஸ் ஸித்திம் அதுலாம்
தவ த்வாரோபாந்தஸ்திதி-பிரணிமாத்யாபிரமரா: || 95 ||

அம்மா!, நீ த்ரிபுராந்தகனான பரமசிவனின் பட்டமகிஷியாக இருப்பதால் உனது பாதபூஜையானது அடங்காத சித்தமுடையவர்கள் செய்யக் கிடைக்ககூடியதில்லை. இதனால்தான் இந்திராதி தேவர்கள்கூட உன்னுடைய க்ருஹத்தின் வாசற்படியருகில் காவல் புரியும் அணிமாதி சித்திகளால் உள்ளே செல்ல இயலாது தடை செய்யப்பட்டு அவர்களிருக்கும் வாயிற்படியிலேயே நின்று நிகரல்லாத மனோரத சித்தியை பெறுகிறார்கள்.

அம்பிகையின் இல்லமான சிந்தாமணி க்ருஹத்தின் ஒன்பதாவது வாசலில் அணிமாசித்திகள் எப்போதும் இருந்து காவல் காப்பதாக ஐதீகம். அவர்களது உத்தரவு இன்றி யாரும் உள்ளே செல்ல முடியாது. இந்திராதி தேவர்கள் வந்தால் கூட இந்திரிய நிக்ரஹமில்லாத காரணத்தால் அவர்களை உள்ளேசெல்ல அனுமதிக்க மாட்டார்களாம் அணிமாசித்திகள். இதன் மூலம் இந்திரிய நிக்ரஹம் என்பதன் சிறப்பையும், அன்னையின் பக்தர்கள் அணிமாசக்திகளுக்கு இணையாக வாயில்வரை சென்று வசிக்கக் கூடிய வாய்ப்பையும் ஒருங்கே கூறியிருக்கிறார் ஆசார்யார்.

த்வம் - நீ; புராராதே - த்ரிபுர சம்ஹாரியான பரமசிவனது; அந்த:புரம் அஸி - பட்டமகிஷியாக இருப்பது; அத: அக்காரணத்தால்; த்வச் சரணயோ - உன் பாதங்களுக்கு; ஸபர்யா மர்யாதா - பூஜை செய்வது; தரள கரணானாம் - சஞ்சலமான சித்தத்தை உடையவர்களுக்கு; அஸுலபா - சுலபமில்லை;ததா ஹி - ஆகவே; ஏதே சதமகமுகா: அமரா: - இந்திரன் முதலான தேவர்கள்; தவ - உனது; த்வாரோபாந்த ஸ்திதிபி: - வாசற்படியருகில் இருக்கும்; அணிமாத்யாபி: - அணிமா முதலிய அஷ்டசித்திகளுடன்; அதுலாம் ஸித்திம் - நிகரற்ற ஸித்தியை; நீதா: அடைய முடிகிறது.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 6

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
  • ஸ்ரீ  மஹாராஜ்ஞீ 
  • மஹாகாமேச மஹிஷீ 

purārante-rantaḥ puramasi tata-stvacaraṇayoḥ
saparyā-maryādā taralakaraṇānā-masulabhā |
tathā hyete nītāḥ śatamakhamukhāḥ siddhimatulāṃ
tava dvāropāntaḥ sthitibhi-raṇimādyābhi-ramarāḥ || 95 ||

You are Leading light of the home of Lord Shiva,
Who destroyed the three cities,
And so coming near you and worshipping at thine feet,
Are not for those with weak mind.,
Who do not have control of their senses.
And that is why perhaps,
Indra and other Gods,
Stay outside your gates,
And attain your sweet self,
By practice of siddhis like Anima.



Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:95 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1243-1248 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment