Contact Us

Name

Email *

Message *

Monday 8 October 2018

Soundarya Lahari - Sloka: 96


Beneficial Results: 
ஸரஸ்வதி கடாக்ஷம்; லக்ஷ்மீ கடாக்ஷம் Attainment of knowledge and wealth
Healing of long-standing wounds, peace of mind, influence over others. Women can attain loving spouse, strengthening marital relationships.

कलत्रं वैधात्रं कतिकति भजन्ते न कवयः
श्रियो देव्याः को वा न भवति पतिः कैरपि धनैः ।
महादेवं हित्वा तव सति सतीनामचरमे
कुचाभ्यामासङ्गः कुरवकतरोरप्यसुलभः ॥ ९६॥

தேவியினுடைய பாதிவ்ரத்ய மஹிமை 
[ஸரஸ்வதி கடாக்ஷம்; லக்ஷ்மீ கடாக்ஷம்]

களத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:
ச்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை: |
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸ்தீநாம் அசரமே
குசாப்யாம் ஆஸங்க: குரகதரோரப்யஸுலப: || 96 ||

சதிதேவி என்றழைக்கப்படும் பதிவிரதைகளின் தெய்வமே!, பிரம்மாவின் மனைவியை எத்தனையோ கவிகள் தங்களது மேதா விலாசத்தால் அடைவதில்லையா?, சிறிதளவே செல்வத்தை கொண்டிருந்தாலும் எவனோ ஒருவன் கூட லக்ஷ்மி-பதி என்று கூறப்படுவதில்லையா?. பதிவிரதைகளில் முதன்மையானவளே!, உனது நகில்களது சம்பந்தமோ மஹாதேவனையன்றி ஒரு மருதோன்றி மரத்திற்குக் கூட கிடைத்ததில்லயே!.

மஹா கவிஞர்கள் மற்றும் மந்த்ர ஜபம் போன்றவற்றின் மூலமாக சரஸ்வதி கடாக்ஷ்த்தைப் பெற்றவர்களை 'சரஸ்வதி வல்லபர்கள்' என்றும், இதேபோல தன-தான்ய செல்வங்களை வசமாக்கிக் கொண்டிருப்பவர்களை 'லக்ஷ்மி-பதி' என்றும் கூறுவது வழக்கம். ஆனால் பார்வதீ பதி என்றோ, ஸதி-பதி என்றோ யாரையும் கூறுவதில்லை. வித்தையையும், செல்வத்தையும் மனிதர்கள் வசப்படுத்திக் கொண்டாலும், மனத்துக்கும், வாக்குக்கும் எட்டாத பரதேவதையை எவரும் வசப்படுத்த இயலாது. அவள் பரமசிவனுக்கே வசப்பட்டவள் என்று கூறுகிறார் லக்ஷ்மீதரர்.

குரவகதரோ: என்றால் மருதோன்றி (மருதாணி) மரம். முன்பு அசோக மரம் புஷ்பிக்க அன்னையின் பாதத்தால் தீண்டப்படவேண்டும் என்று 85 ஆம் ஸ்லோகத்தைல் இங்கே சொன்னது போல, மருதோன்றி மரம் புஷ்பிக்க என்பதற்காகக் கூட அன்னை அதனை ஆலிங்கனம் செய்யமாட்டாளாம். ஏனெனில் அவளால் ஆலிங்கனம் செய்யப்படுபது ஸ்ரீ பரமேஸ்வரன் ஒருவனே என்றுகூறி அவளது பதிவிரதா சிறப்பை கூறியிருக்கிறார் பகவத்பாதர்.

வைதாத்ரம் களத்ரம் - பிரம்மாவின் பத்னியாகிய சரஸ்வதி; கதிகதி கவய: எத்தனை கவிகள்; ந பஜ்ந்தே - அடையவில்லை; கோ வா - எவன் தான்; கைரபி தநை: - கொஞ்சம் செல்வம்; ச்ரியோ தேவ்யா: - லக்ஷ்மிதேவிக்கு; பதி: - புருஷனாக; ந பவதி - ஆகிறதில்லை; ஸதீநாம் அசரமே - பதிவிரதைகளுள் முதன்மையானவளே; மஹாதேவம் ஹித்வா - மஹா தேவரைத் தவிர;தவ - உன்னுடைய; குசாப்யாம் ஆஸங்க: ஆலிங்கனமானது; குரவகதரோ: அபி - குரவக வ்ருக்ஷத்திற்குக் கூட; அஸுலப: கிடைப்பதரிது.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 29

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • ஸதீ 
  • ஸதாசிவ குடும்பிநீ 
  • ஸதாசிவ பதிவ்ரதா

kalatraṃ vaidhātraṃ katikati bhajante na kavayaḥ
śriyo devyāḥ ko vā na bhavati patiḥ kairapi dhanaiḥ |
mahādevaṃ hitvā tava sati satīnā-macarame
kucabhyā-māsaṅgaḥ kuravaka-taro-rapyasulabhaḥ || 96 ||

Many poets reach the Goddess of learning,
The wife of the creaor,
By composing soulfull poems.
Many who search and attain riches,
Are termed as the Lord of the Goddess of wealth.
Oh, first among chaste woman,
Except Lord Shiva your consort.
Your breasts have not even touched,
The holy henna tree.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment